மூலிகைகள் மற்றும் விருட்சங்கள் தரும் பயன்கள்-1

நாயுருவி : திருஷ்டி கழிப்பிற்க்கு மிக பயனுள்ள ஒன்று இந்த செடியின் வேர். தீய கண் பார்வைகளால் பாதிக்கப்பட்டோர் இந்த செடியின் வேரை தலையனை அடியில் வைத்து உறங்கி வர, திருஷ்டி தோஷங்கள் விலகும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் இதே முறையை பின்பற்றி பயன் பெறலாம்.

குழந்தைகள் அல்லது பெண்கள் மற்றும் தீய சக்திகளால் இருட்டை கண்டு பயப்படுவோர் இந்த செடியின் வேரை கழுத்தில் சிகப்பு நூலில் கட்டி கொள்ள பயம் விலகும்.
திருமண தடை மற்றும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நின்று போதல் போன்றவைகளுக்கு இந்த செடியின் வேரை வலது கை மணிக்கட்டில் ஒரு வருடம் வரை கட்டி கொள்ள திருமண தடைகள் விலகும்.

வேரை எடுக்கும் முன் செடிக்கு மஞ்சள் நீர் ஊற்றி வேரை எடுக்க அனுமதி கோரி தூப தீபம் காண்பித்து பின்பு ஆணி வேர் அறுபடாமல் ஆயுதம் படாமல் சிறிது வேரை எடுத்து பின்பு மீண்டும் செடியை மண்ணில் புதைத்து மஞ்சள் நீர் ஊற்றி வளர்த்து வரவும்- வேறு மந்திரங்கள்,திசைகள் என எதுவும் இல்லை 



Post a Comment

Previous Post Next Post

Get in touch!