சிம்ம ராசி / லக்னத்திற்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)
ஆண்கள் :
மஹான்கள், சித்தர், குரு ஜீவ சமாதி தரிசனம் வாழ் நாள் முழுதும் அவசியம். முடிந்த போதெல்லாம் சென்று தரிசித்து வரலாம்.
தினம் ஆதித்ய ஹ்ருதயம் காலை சூரியன் எழுவதை பார்த்த வாரே கூறி வரவும். பின்பு 3 முறை சூரியனுக்கு நீர் வார்க்கவும்.
ஸ்ரீரங்கம் உடையவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதி சென்று தரிசித்து வரவும்.
பெண்கள் :
முடிந்த போதெல்லாம் முருகருக்கு பால் அபிஷேகம் செய்து வரவும்.
தினசரி காலை மாலை "கருட பத்து " படித்து வரவும்-முடியாதவர்கள் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.
சுதர்சன சக்கரம் வைத்து பூஜித்து வரவும்.
பவுர்ணமி தோறும் அம்மனுக்கு பால் பாயசம் நிவேதனம் செய்து அதை அனைவருக்கும் வழங்கி வரவும்.