ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய முறைகளை-பரிகாரங்களை செய்து வரலாம். நம் முறைகள் அனைத்தும் மிக எளிமையானவையாக இருப்பினும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பது கடைபிடிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நம்பிக்கையுடன் செய்து வர மிக உயர்ந்த செல்வ நிலையை அடையயலாம். அசைவ உணவு பழக்கம் இருப்பின் தவிர்த்தல் நலம். அனேக சுபத்தை அளிக்கும் கிரகங்களின் நன்மைகளை அசைவ உணவு பழக்கம் பாதிக்கும்-தடுக்கும். மேலும் சனி, ராகு கிரகங்களின் கோட்சார நிலை அல்லது ஜாதகத்தில் சரியில்லாத நிலை இருப்பின், அசைவ உணவு பல மடங்கு பாதிப்பு தரும். ராகு திசை, சனி திசை, ஏழரை, ஜென்ம, கர்ம, கண்டக சனி நடப்பவர்கள் அவசியம் தவிர்த்தல் வேண்டும். இல்லையேல் எந்த பரிகாரமும் பலன் தராது. இதை பற்றிய எம் பிரத்யேக காணொளி காட்சி ஒன்று தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.
(1) வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.
(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி வியரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
(3) சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
(4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
(5) மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
(7) ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
(8) வெள்ளை எள் உருண்டையை ஓடும் ஆற்றில் 43 நாட்கள் விட்டு வரலாம்.
(9) குங்கும பூவை உணவில் முடிந்த போதெல்லாம் சேர்த்து வரவும். தினசரி பசுவிற்க்கு மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம். மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்த பாவங்களை, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கங்களையும் களையச்செய்யும்.
மேற்கண்ட முறைகளில் முடிந்தவர்கள் முடிந்தவற்றை செய்யலாம். ஏதாவது ஒன்று செய்தாலும் பயன் உண்டு. அனைத்தையும் செய்தாலும் பயன் உண்டு.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!