இந்த பரிகாரம் செய்ய ஏற்ற நாள் வெள்ளிகிழமை-காலை 6-7 மணி அல்லது மதியம் 1-2 மணி. முடியாதவர்கள் மட்டும் இரவு 8-9 மணியளவில் செய்யலாம்.
ஒரு கைக்குட்டை அளவுள்ள வெள்ளை துணியை சுத்தமான பன்னீரில் நனைத்து காயவைத்து கொள்ளவும். பின்பு அதில் புதிதாக வாங்கிய கையளவு கல் உப்பு, மற்றும் 6 மொச்சை, 6 டைமண்டு கற்கண்டு சேர்க்கவும். பின்பு துணியின் நான்கு மூலைகளிலும் சிறிது குங்குமப்பூ தேய்த்து முடிச்சாக கட்டி வீட்டின் அல்லது அலுவலகத்தின் வட கிழக்கு மூலையில் யார் கண்ணும் படாதவாறு வைத்து விடவும். மறு வாரம் அவற்றை எடுத்து வில்வ மரம் அடியில் பிரித்து போட்டு விட்டு , அதே துணியை எடுத்து வந்து மீண்டும் செய்து வரலாம். அவரவருக்கு தேவையான வாரங்கள் செய்து பயனடையுங்கள். கை மேல் பலன் தரும் எளிய பரிகாரம் இது.