கொடுக்கப்பட்டுள்ள தாந்த்ரீக முறை முத்து சங்கின் மூலம் வசீகரத்திற்கு பயன்படும் ஒன்று. இதை முறையற்றவர்களிடம்உபயோகிப்பின் மிகுந்த துன்பம் ஏற்படும். எனவே, நல்ல காரியங்களுக்கு, உதாரணமாக வேலைக்கு இண்டர்வியூ செல்லும் பொழுது, வியாபார நிமித்தம், கணவன் மனைவி சச்சரவு சரியாக, உறவுகள் வலுப்பட போன்றவைகளுக்கு உபயோகிக்கலாம்.
இதை ஞாயிறன்று தொடங்கவும். குளித்து முடித்து சுத்தமான மனதுடனும், ஆடைகளுடனும் ஏதேனும் விரிப்பினில் சங்கின் எதிரே அமர்ந்து சங்கிற்கு குங்கும பூவினால் திலகம் இட்டு, நெய் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 முறை கூறி வழிபடவும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறும் பொழுதும் மஞ்சள் கலந்த அரிசியை சங்கிற்கு இட வேண்டும்- அர்ச்சிப்பது போல். எவர் முன் வசீகரமாய் தெரிய வேண்டுமோ அவரின் பெயரை கீழ்க்கண்ட மந்திரத்தின் விடுபட்ட பகுதியில் சேர்த்து மந்திரத்தை கூறவும். இதை தொடர்ந்து முப்பது நாட்கள் செய்து வர காரிய பலிதம் உண்டாகும்.
ஓம் க்ரீம் ----------------------யை வசமாணய சுவாஹா :