கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள், பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
கனவில் தெய்வங்கள், பிராமணர்கள், உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில், சர்ச், மசூதியில் பூஜை செய்பவர்கள், நீர் நிலைகள், எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம். மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.