தொழில்,வியாபாரம் செய்யும் பலருக்கு சுறுசுறுப்பாக செயல் படவேண்டுமென்ற எண்ணமிருப்பினும், தங்கள் நாற்காலியில் உட்கார்ந்த மறு நிமிடமே, வேண்டாத கவலைகள் வந்து சேரும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் இனம் தெரியாத பயம் குடிகொள்ளும். வேண்டாதோர் வந்து சேர்ந்து அந்நாள் வீணாகும், இந்நிகழ்வுகள் தொடர் நிகழ்ச்சியாகும். இவ்விடத்தில் ஒரு சுறுசுறுப்பற்ற தன்மை உருவாகி, பண வரத்து இல்லாமல் குறைந்து போகும். மேலும் வேலைக்கு செல்லும் பலருக்கும் இது போன்று நடந்திருக்கலாம்- இப்படிப்பட்ட நிலையில் இருப்போர் பண வரத்து மேலோங்க, சுறுசுறுப்பாக இயங்க 'ஜேட்' என்ற இரத்தின கற்கள் பொருந்திய மரத்தை வாங்கி தங்கள் மேஜையில் வைத்திருக்க, மேற்கண்ட சோர்வு, மந்த நிலைகள் மாறி அவ்விடமே நேர்மறை சக்திகள் நிறைந்திருப்பதை காணலாம். அது மட்டுமல்ல, கழுத்து முதல் முதுகு அடிப்பாகம் வரை வழியால் அவதிப்படுவோர் மேற்கண்ட கற்களை மாலையாக அணிந்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்-இக்கற்கள் 'இன்பிரா ரெட்' (அகச்சிவப்பு) தன்மையை உள்ளடக்கியது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர். பல மருத்துவ இடங்களில் மேற்கண்ட கற்களை கொண்டு முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு மசாஜ் தெரபி செய்தும் வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!