நாளை 4:30 மணியளவில் சிவன் சன்னதி சென்று பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்வித்து, கர்ப்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, பின் சண்டிகேஸ்வரர் சன்னதியில் ஓர் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமும் நந்தியெம்பெருமானுக்கு ஒரு நெய் விளக்கும் இட்டு, பின் வெளி பிரகாரத்தில் 8 மண் அகலில் கருப்பு திரி கொண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 5 :30 மணிவரை கோவிலில் இருந்து வழிபாடு செய்து வர தீராத கடனும் தீரும்-கிடைத்தற்கரிய அற்புத நாள் இன்று.
வேறு முறை : சுவாதியும் சேர்ந்தே வருவதால், மாலை 5 :30 - 6 மணிக்குள் லட்சுமி நரசிம்மர் சன்னதி கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் தீபம் சேர்த்து, அங்குள்ளோர்க்கு எலுமிச்சை சாதம் தானம் செய்ய கடன்கள் அனைத்தும் கரைந்து போகும். ( பரிகாரமாக தானம் கொடுக்கும் பொருளை தாங்கள் உண்ண கூடாது )
மேற்கண்ட இரண்டில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டையும் செய்ய முடிந்தோர் மஹா பாக்கியசாலிகள் ஆவர். இதே நேரத்தில் அரச,ஆல மரத்திற்கு நீர் ஊற்றி வருவதும் மிக நன்று.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!