நம் புராணங்களில் பல முறை கேள்விப்பட்டிருப்போம்-கந்தர்வர்களை பற்றி. தற்காலத்தில் நடக்கும் பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமில்லாத காதல் திருமணங்களை வித்திட்டவர்கள் இவர்கள் எனலாம். அப்சரஸ்களின் கணவர்களான இவர்கள் ஜன, தன மற்றும் ராஜ வசீகர ஆகர்ஷண சக்தியை அளிக்கவல்லவர்கள் இவர்கள். யட்சிணிகளை போல் இவர்களிடத்தும் நாம் ஏதேனும் கேட்க, பதிலுக்கு நம்மிடமிருந்து இவர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இவர்களை முறையாக வழிபட்டு வந்தால், தாமே அறிந்து நம் துன்பங்களை போக்க வல்லவர்கள் இவர்கள். மேலும் தாய் சாரதா தேவியை பூஜித்து வர, கந்தர்வர்களை எளிதில் வசமாக்கலாம். இவர்களுக்கு மனிதர்களுக்கு மேலும் தெய்வங்களுக்கு உட்பட்டும் சக்திகள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மஹாபாரதத்தில் இவர்களை பற்றிய சுவையான விஷயங்கள் உள்ளன. இவர்களும் யக்க்ஷ யக்ஷினிகளை போன்று குபேரரின் கட்டுப்பாட்டில் உள்ளோர் தாம். சில காரணங்களை கருதி இவர்களின் அதியற்புத சக்திகளை பற்றி இங்கே அளவோடு தான் கொடுத்துள்ளோம். பூஜை முறைகளை இவ்விடம் விளக்க முடியாது.

கந்தர்வர்கள் :

விஸ்வவசு- ராமாயண காலத்திற்கு முன்பே  தோன்றிய இவர் தான் ரிக் வேதத்தை உருவாக்கியவர்.

சித்ரரதா - கந்தர்வர்களை ஆட்சி செய்யும் பொறுப்பு இவருடையது.

சித்ராங்கதா - கந்தர்வர்களுக்கெல்லாம் அரசனாக விளங்குபவர்.

திம்பரு - அர்ஜுனருக்கே கலைகளை கற்பித்தவர்.

மேலும் ஷைலஸு , திருதராஷ்டிரா,பஞ்சசிகா , மதாளி போன்ற வேறு சில கந்தர்வர்களும் உண்டு. ஸ்தூல ரூபத்தில் இருக்கும் இவர்களின் அருளோடு இன்றும் பலர் வெற்றிகரமாக உள்ளனர்.

பலரின் தொடர் விண்ணப்பத்தால் யக்ஷிணி, கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் பூஜா விதிகளை ஒரு தனி பயிற்சியாக, விரைவில் கொடுக்க எண்ணம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!