நம் முன்னோர்கள், மஹரிஷிகள் அருளியுள்ள பல மாந்த்ரீக, தாந்த்ரீக, மாய கலைகளை போல் இவ்வுலகில் பல் வேறு நாடுகளில் பல் வேறு விதமான யந்திர கலைகள், மாய கலைகள் உள்ளன. எப்படி நம் விநாயகரை,ஈசனை, எந்நாட்டினர் வழிபட்டாலும் பலன் உண்டோ, அதே போல் அந்தந்த தேவதைகளை யந்திரங்களை நாம் இங்கு பயன்படுத்தினாலும் பலன் உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு சில நாட்டினரின் மாய கலைகள் வெகு சீக்கிரம் பலன் தரக்கூடிய ஒன்று. பல காலம் முன்பு பரீட்சார்த்த முயற்சியாக இம்முறைகளை செய்து பார்க்க அற்புத பலன்கள் கிடைத்தது. எனினும், சான்றோர் கூற்று படி, இவற்றை ஆசான்கள் செய்ய கூடாது என்கிற விதியின்படி நிறுத்தப்பட்டது. சில காலங்கள் கழித்து, சமீபத்தில், ஒரு சில நபர்களுக்கு இவற்றை பயிற்சிக்கும் நிலை ஏற்பட்டது. நாமே எதிர் பார்க்கமுடியாத அளவு, அபரிமிதமான பலன் கிடைக்க ஆரம்பித்தது-தகுந்த நபர்களுக்கு. இந்த தேவதைகள் மொத்தம் 72 உள்ளன. லாட்டின் நாட்டில் பழங்குடியினரால் தொடங்கிய இவை இன்றும் பலநாட்டினரால் தொடர்ந்து பயிற்சிகளின் மூலம் இந்த தேவதைகளை அழைத்து பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வது நடந்து வரும் ஒன்று.

யக்ஷினிகள் மற்றும் அப்சரஸ்களை போல் இந்த உபாஸனையினால் வேறு தொந்தரவுகள் வருவதில்லை. மேலும், இந்த உபாசனையில் கடுமையான நியம நிஷ்டைகளும் இல்லை, மிக சுலபமான ஒன்று. அடுத்த மாதம் முதல் இதை பயிற்சியாக கொடுக்க எண்ணம்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!