தன்னை உள்ளன்போடு உபாசிப்போருக்கு உடனடி வசமாகி, கேட்டதை அள்ளித்தரும் கலியுக கடவுள் தத்தாத்ரேயர். இவரின் ஜெயந்தி விழா 13.12.16 அன்று உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாளில் அவரின் கோவிலுக்கு சென்று கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட்டு வர நன்மைகள் வந்து சேரும். மேலும், அன்னதானமிடுவோரை இவருக்கு மிகவும் பிடிக்கும். திருமண தடை அல்லது திருமணம், மண வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் உடையோர், இந்த தினத்தில் இவரை வழிபட்டு குறைந்தது 9 நபர்களுக்கு மதிய வேளையில் (1 :15 - 2 மணிக்குள் ) எலுமிச்சை சாதம் தானமாக அளிக்க, தடைகள் விலகுவதை கண் கூடாக காணலாம். மேற்கண்ட திருமண பிரச்சனைகள் இல்லாதோரும் தானமளிப்பின், அன்றாட வாழ்வின் தடைகள் நீங்கும். இவரின் 'வஜ்ர கவசத்தை' கூறி வர கிரங்களால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும்.