நேரம் : மாலை 4:30 மணி முதல்
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை
நிவேதன அன்னம் : மாலை 8:15 மணி முதல்
முக்கிய குறிப்பு : நான்கு நபரை சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு சங்கல்ப கட்டணமாக ரூ.ஐநூறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சங்கல்பம் செய்யும் அனைவருக்கும், அனைத்து வெற்றிகளையும் தேடி வரச்செய்யும் 'சண்டி' தேவியின் வெள்ளி முலாம் பூசப்பட்ட டாலர் பிரசாதமாக வழங்கப்படும்.
சண்டி தேவியை, சாமுண்டியை பற்றி பல முறை விளக்கி உள்ளதனால், அவரின் மகத்துவத்தை பற்றி மீண்டும் கூற வேண்டியதில்லை உங்களுக்கு. தை மாத அமாவாசை சண்டி ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவரும் அந்த தெய்வீக ஆற்றலை உணர்ந்துள்ளீர்கள் என்பது, மீண்டும் எப்பொழுது சண்டி ஹோமம் என அனுதினமும் எமக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களே சாட்சி. சென்ற முறை தவற விட்டவர்கள், இம்முறை தவற விடாது, கலந்து கொண்டு சண்டி தேவியின் ஆசி பெறுமாறு கேட்டு கொள்கிறோம். மாசி மாத அமாவாசைக்கும் சண்டி தேவிக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன.
வெளியே சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவிப்போர் , அல்லது வெளியில் கூற முடியாத சில விஷயங்களால் துன்பப்படுவோர், இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு கலச ஜல அபிஷேகம் செய்து பயன் பெறலாம்.
மேலும் விஷேச சங்கல்பம் செய்து கொள்ள விழைவோர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். இந்த ஹோமத்தில், அன்னதானத்திற்கான பொறுப்பை ஏற்று முன்னோர்களின் மற்றும் சண்டி தேவியின் அருளாற்றலை பெற நினைப்போர் முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவும். புடவை, மற்றும் ஹோமத்திற்குண்டான பொருட்கள் கொடுக்க விழைவோரும் கொடுத்து பயன்பெறலாம்.
+918754402857 / +919840130156
மிக முக்கிய குறிப்பு : சங்கல்பம் செய்து கொள்வோர் முன்கூட்டியே தெரிவிக்கவும். ஹோமம் நடக்கும் இடத்தில் சங்கல்ப கட்டணம் பெறப்படமாட்டாது.