எவரேனும் நம் தவறில்லாது நமக்கு தொல்லை கொடுத்து

வந்தாலோ, நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லைப்படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம். கவனம் : ஒரு பிரச்சனைக்கு ஒரு முறை மட்டுமே செய்து விட்டு, பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம். இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தாரா.

தகாது பிரச்சனை செய்யும் நபரின் பெயரை அல்லது சம்பந்தமில்லாது நம்மை துரத்தும் பிரச்சனையை சுருக்கமாக ஒரு வெள்ளை தாளில் எழுதி  நீங்கள் அணியும் ஷூ வின் உள்ளே வைக்கவும். பின் அதை அணிந்து கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் வீதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேகநடை போடவும். பின் வீடு வந்து அந்த தாளை வலது  கையினால் எடுத்து, கழிவறையில் கழிவுகள் செல்லும் இடத்தினில் போட்டு நீர் ஊற்றி விடவும்.

எதிர் மறை துர்  சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணை கொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. நீங்கள் நடக்கும் சமயம், உங்கள் கால்கள் வழியே அந்த எதிர் மறை துர் சக்திகள் வெளியேறுவதாக மனதில் நிறுத்தவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857  
www.youtube.com/amanushyam

Post a Comment

Previous Post Next Post

Get in touch!