குறிப்பாக சில பரிகாரங்கள் மற்றும் ஆன்மீக விஷயங்களை இன்றளவும் தொடர்ந்து செய்து வருவதினால் செல்வ செழிப்பில் வட நாட்டினர் திகழ்ந்து கொண்டுள்ளனரே..எப்படி தெரியுமா ??

வருடத்தில் தானமளிக்க, முக்கியமான ஆன்மீக பரிகாரங்கள் செய்ய மற்றும் ஆன்மீக போதனைகள், பூஜை பொருட்கள் மற்றும் அதிர்ஷ்டம் தரும் பொருட்களை வாங்கி வைத்து பூஜிக்க ஏற்ற தினமாக அக்ஷய திரிதியை உள்ளது. அதே போல் அவ்வளவு வீரியங்களையும் உள்ளடக்கிய நாள் தான் தீபாவளியை தொடர்ந்து வரும் சுக்ல பக்ஷ நவமி- அக்க்ஷய நவமி என்ற பெருமை பெற்ற நாளிது.

இந்நாளில் முடிந்த தானங்கள் மற்றும் மிருகங்கள், பறவைகளுக்கு உணவிடுவது மிக சிறந்த நற்பலனை கொண்டு சேர்க்கும்.

இந்நாளில் பூஜையறையில் மஹாலக்ஷ்மி தாயார் மற்றும் துர்கைக்கு, பூக்கள் சாற்றி தூப தீபம் செய்வித்து, மஹாலக்ஷ்மி தாயார் கழுத்தில் ஒரு நெல்லி கனியினை சிகப்பு நூலில் மாலையாக கட்டி வழிபட்டு வர செல்வ வளம் சேரும்.

பணப்பெட்டியின் அருகில் அல்லது பூஜை அறையில் வலம்புரி சங்கு, கோமதி சக்கரம், கணேஷா சங்கு, ராக்கெட் சங்கு மற்றும் முத்து சங்கு போன்ற ஐவகை சங்குகளை வைத்து வழிபட்டு வர, தீராத பணக்கஷ்டங்களும் தீரும்.

இந்நாளில் மஹாலக்ஷ்மி சன்னதியில் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட்டு வர மிகப்பெரும் தோஷ நிவர்த்தி பெறலாம். கோவிலில் தென்படும் குழந்தைகளுக்கு மஞ்சள் லட்டு கொடுத்து வரலாம்.

ஆன்மீக பரிகாரங்கள் செய்வது , ஜோதிட ரத்தினம் வாங்குவது அல்லது அணிவது, ஜோதிஷ பரிகாரங்கள் அல்லது கருத்துக்களை கேட்பது, சத்சங்கங்களில், கூட்டு பிரார்த்தனைகளில் கலந்து கொள்வது இந்நாளில் செய்ய அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேர்க்கும்.

இந்த நாளில் நெல்லி மரத்தினடியில் சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் தூப தீபம் காட்டி, மலர் சாற்றி, நிவேதனம் செய்து வழிபட்டு வர, பல ஜென்ம பாவங்கள் தீரும். அது மட்டுமின்றி, நெல்லி மரத்தடியில் குடும்ப சகிதம் அமர்ந்து உணவருந்த, குடும்ப அமைதி நீடித்து நிலைக்கும். சொத்து பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

வறியோர்க்கு உணவிடுவது மற்றும் உடைகள் தானமளிப்பது,இந்நன்னாளில் செய்ய மிக சிறந்த நற்செயலாய் அமையும்.

கிடைத்தற்கரிய இந்நாளை முழுமையாக பயன்படுத்தி அனைத்து நலன்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!