வாசி தீரவே காசு நல்குவீர்-செய்யும் தொழிலில் லாபம் பெருக
செய்யும் தொழிலில் லாபம் பெருகவும், பண தட்டுபாடு இல்லாமல் இருக்கவும் திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் ஓதவும் :
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசு இல் மிழலையீர் , ஏசல் இல்லையே. 1
இறைவர் ஆயினீர், மறை கொள் மிழலையீர்
கறை கொள் காசினை முறைமை நல்குமே. 2
செய்யமேனியீர், மெய் கொள் மிழலையீர்
பை கொள்அரவினீர், உய்ய நல்குமே. 3
நீறு பூசினீர், ஏறுஅது ஏறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4
காமன் வேவ ஓர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே. 5
பிணி கொள் சடையீனீர், மணி கொள் மிடறீனீர்
அணி கொள் மிழலையீர், பணிகொண்டு அருளுமே. 6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியீனீர், சங்கை தவிர்மினே. 7
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்
பரக்கும் மிழலையீர்,கரக்கை தவிர்மினே. 8
அயனும் மாலுமாய், முயலும் முடியீனீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்
வெறி கொள் மிழலையீர், பிறிவுஅது அரியதே. 10
காழி மா நகர், வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல், தாழும் மொழிகளே. 11