இந்நாளில் மதியம் பணிரெண்டிலிருந்து ஒரு மணிக்குள் அரச மரம் ஒன்றை தேர்ந்தெடுத்து அதன் வேருக்கு முதலில் நீர் பின்பு சிறிது பால் ஊற்றி வழிபட்டு அதனடியில் ஒரு மண் அகலில் சுத்தமான நெய் விளக்கேற்றி, தூபம் காண்பித்து, மரத்தை 21 முறை சுற்றி வந்து பின் மரத்தினை வேண்டி கொண்டு 12 இலைகளை ஆயுதம் படாமல் பறித்து வீட்டிற்கு எடுத்து வந்து மாலை அந்த இலைகளை சூடு நீரில் இட்டு கொதிக்க வைத்து பின்பு அன்றாடம் குளிக்கும் நீரில் இட்டு குளிக்க, சென்ற ஆண்டில் உங்களை அழுத்தி வந்த அனைத்து பிரச்சனைகளும் விலகி நன்மைகள் சேரும். மிகுந்த சூட்சுமங்கள் நிறைந்த பரிகாரம் இது.