இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும். 

கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும். 

முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார். 

வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை  மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும். 

இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும். 

மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு வரலாம். 

இந்நாளில்மாடுகள் மற்றும் குரங்குகளுக்கு அச்சு வெல்லம் கொடுத்து வருவது  அளவற்ற நற்பயனை தரும்.

ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும். 

சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து வீட்டு வாயிலில் இந்நாளில் கட்ட வீட்டினுள்  மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். 

மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும்  ஒரு  கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும். 

வீட்டின் வாயிலில் அசோக மர இலைகளை கட்டி தோரணமாய் தொங்கவிடுவது லக்ஷ்மியை நம் இல்லத்திற்கு வரவேற்பதாய்   அமையும். 

இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும். 

 பசுக்களுக்கு இந்நாளில் முடிந்த அளவு மஞ்சள் லட்டு கொடுத்து வர வாழ்கை இனிப்பாகும்.

அரச மரத்திற்கு பால் கலந்த நீரை இந்நாளில் ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.

முக்கியமாக இந்நாளிலும் மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும். 

மறு நாள் இரவு (அமாவாசை) அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து திரும்பி பார்க்காமல் வீடு சேர்ந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும். 


மறு நாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும். 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!