இந்த சிந்தூரத்தை படிப்பில், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல இஷ்டம் இல்லாத குழந்தைகளுக்கு நெற்றியில் இடச்செய்ய, கல்வியில் நாட்டம் மிகும்.
வீட்டின், தொழில் செய்யும் இடத்தின் தலை வாசல் கதவில் இந்த சிந்தூரத்தை இட்டு வைக்க, தனப்ராப்தி மற்றும் நல்லவைகள் தேடி வரும்.
அரசினால் தொல்லைகள், அரசு வேலைக்கு முயற்சிப்போர், உயரதிகாரிகளினால் தொல்லைகள் அனுபவிப்போர் இந்த சிந்தூரத்தை ஞாயிறன்று நீரில் விட, மேற்கண்ட தொல்லைகள் விலகும். அரசினால் ஆதாயம் உண்டாகும். வேலை இல்லாதோரும் இதை செய்து பயனடையலாம்.
வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் சிறு விநாயகர் விக்ரகம் வைத்து, அவரின் நெற்றியில் இந்த சிந்தூரத்தை இட்டு பூஜிக்க அனைத்து காரிய தடைகளும் விலகும்.
சனிக்கிழமையன்று ஒரு கரிய வெற்றிலையில் சிறுது சிந்தூரம் தடவி, வெற்றிலையில் ஒரு கட்டி கற்பூரம் வைத்து அதை மடித்து நீல நிற நூலால் கட்டி, யாரும் பார்க்காத சமயத்தில் அதை அரச மரத்தடியில் போட்டு விட, அனைவராலும் மதிக்கப்படுவோம். அவமரியாதைகள் இருப்பின் அவை நீங்கி நலம் பெறலாம்.
தம்பதியர் பிரச்சனைகள் இருப்பின், மனைவியின் தலையணை அடியில் சிந்தூரம் தடவிய கற்பூரம் ஓர் இரவு வைத்து, அதே இரவில் கணவரின் தலையணை அடியில் சிறிது சிந்தூரம் மட்டும் தடவி வைத்து, காலையில், கற்பூரத்தை எடுத்து பூஜை அறையில் வேண்டியவாறு எரித்து விட, தம்பதியினர் ஒற்றுமை கூடும்.
கடன் பிரச்னை நீங்க, ஒன்பது செவ்வாய்கிழமைகள் இந்த சிந்தூரத்தை அனுமனின் படத்தில் இட்டு, அனுமன் சாலிசா படித்து நிவேதனம் செய்து வணங்கி வர, தீராத கடனும் தீரும். செய்ய வேண்டிய நேரம்: காலை :6:15-7 அல்லது மதியம் 1:15-2 அல்லது இரவு 8:15-9 .
வீட்டில், தொழில் செய்யும் இடத்தின் பணப்பெட்டியில் சிந்தூரமிட்டு, பின் ஒரு வெற்றிலையில் சிந்தூரத்தை தடவி அதை சிறிய சிகப்பு துணியில் முடிந்து வைக்க, பண வரவு மிகும்.