மக அஷ்டமி 22.5.18

நாளை மக அஷ்டமி-எப்படிப்பட்ட துன்பத்தில் இருப்பினும் இன்றைய நாளில் கீழ்கண்ட பரிகாரத்தை செய்வதின் மூலம் வெகு விரைவில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம். எம்மிடம் தனி நபர் ஆலோசனைக்கு வருகிற ஒரு சிலரிடம் இதை கூறி, பரிசோதிக்கப்பட்ட முறையாகும் இது.

இந்த நாளில் மதியம் பன்னிரெண்டிலிருந்து ஒரு மணிக்குள், வீட்டினில் தெற்கு முகம் பார்க்க உங்களின் மூன்று தலைமுறை முன்னோர்களையும்,எதிரிகள் விலக, எதிர்ப்புகள் அகல,மனதார பிரார்த்தித்து எட்டு மண் அகலில் கருந்திரியிட்டு தீபமேற்ற, முன்னோர்கள் மனம் குளிர்ந்து அவர்களின் ஆசிகளை வழங்கி உங்களின்  மேல் நிலைக்கு ஆசீர்வதிப்பர். விளக்குகளை ஏற்றிய பின், தங்கள் கைகளால் எருமைகளுக்கு  உணவிடுவது, காக்கைக்கு உணவிடுவது அவசியம். பலன்கள் உடனுக்குடன் ஏற்பட எட்டு எருமைகளுக்கு உணவிடலாம் (பழங்கள், கீரைகள்). இங்கே மிக முக்கியமானது, உங்களின் பிரார்த்தனை- முன்னோர்களை அழைத்து மனதார ஆசி வேண்டி வணங்குவது முக்கியம். இந்நாளில் மாலையில், துர்க்கைக்கு நெய்விளக்கேற்றி, சிகப்பு வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

வேறொரு முறை : மேற்கண்ட நேரத்தில் இவற்றை செய்ய முடியாதோர், மாலை வேளையில் செய்யலாம். அதே போன்று எருமைகளுக்கு உணவிட முடியாது போயின், பசுவிற்கு உணவிடலாம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!