மைத்ர முகூர்த்த நாட்கள் கடன் தீர்க்கும் நாட்கள் என இணையம் முழுதும் மற்றும் யு டியூப் விடீயோக்களில் பரவலாக சில வருடங்களாக வளம் வந்து கொண்டுள்ளது. இவற்றை கூர்ந்து கவனித்தால் அனைத்தும் ஏதேனும் ஒரு அடிப்படை (SOURCE) ல் இருந்து காப்பியடிக்கப்பட்டவையாக இருக்கும். இப்படி கொடுப்பவர்களிடம் 2024 வருடத்திற்கான மைத்ர நேரத்தை கேட்டால் பதில் வராது. காரணம் இணையத்தில் ஒரு வருடத்திற்கான மைத்ர முகூர்த்த நேரம் என்று முழுதும் ஒரு சிலர் கொடுத்து விடுகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் வார நாட்களில் செவ்வாய் உடன் வருவதே மைத்ர முகூர்த்த நாளாகும். சொல்லும் பொய்களுக்கு அளவில்லாமல் எதை தின்றால் பித்தம் தெளியும் என இருக்கும் அப்பாவி மக்களுக்கு இவர்கள் இஷ்டத்திற்கு திங்கள் வியாழன் சனி என்று அஸ்வினி அனுஷம் வரும் நாட்களில் எல்லாம் அடித்து விடுகிறார்கள். பல அப்பாவி மக்களும் அவற்றை கடைபிடித்து பின்னர் ஏமாற்றமடைந்து ஜோதிடம் பொய் என்ற நிலையை எடுத்து விடுகிறார்கள். 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" இனியாவது மக்கள் இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கி தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இழக்காது இருந்தால் நன்று. இங்கே கொடுத்துள்ள நாட்கள் மைத்ர முகூர்த்த நேரத்தையும் மிஞ்சும் கடன் தீர்க்கும் நாட்கள் ஆகும். இந்நாட்களில் கடன் தீர சிறு பகுதியை அடைப்பது முழு பலனையும் சிறிதளவு தனியாக எடுத்து வைப்பது முக்கால் பங்கு பலனையும் கொடுக்கும். குலதெய்வம்,நரசிம்மர்,வராஹி,ஆஞ்சநேயர்,சுப்பிரமணியர் போன்ற ஏதேனும் ஒரு தெய்வத்தை தியானித்து சிகப்பு துணியில் முடிந்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடன் தீர்க்க நாட்கள் இந்தியாவிற்கு மற்றும் இலங்கைக்கான நேரம் மட்டுமே.
மேற்கண்ட கடன் தொல்லை தீர நேரம் சூரிய உதயம் 6 மணி என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டது ஆகும். தங்களின் ஊர் சூரிய உதயம் நேரம் GOOGLE ல் பார்த்து அதன்படி செயல்படவும்-உதாரணத்திற்கு மார்ச் 4 சூரிய உதயம் 6:15 என இருப்பின் 12:15 மணிக்கு துவங்கி 1:15 வரை செய்யலாம். இந்த நேரத்தில் விளக்கேற்றி வைத்து ருண விமோசன ஸ்தோத்திரம் படிப்பது பலனை துரிதப்படுத்தும்.