கடக ராசி / லக்னத்திற்க்கு வாழ் நாள் பரிகாரங்கள் (பொது)
ஆண்கள் :
திங்கள் தோறும் பார்வதியை தரிசித்து வாருங்கள். முடிந்த போது திருகடையூர் அபிராமி தரிசனம் செய்வது நன்மை தரும்.
வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி துர்கையை வழிபடவும்.
கீழ்க்கண்ட சரபேஸ்வரர் காயத்ரி மந்திரத்தை உட்சரித்து வரவும் :
ஷாலுவேஷாய வித்மஹே : பக்ஷி ராஜய தீமஹி
தந்நோ ஸரப : ப்ரசோதயாத்
பெண்கள் :
விநாயகரை ஞாயிறு அன்றெல்லாம் நெய் விளக்கேற்றி கோவிலில் சென்று வழிபாட்டு வரவும்.
லலிதா சஹஸ்ரநாமம் செவ்வாய் அன்று வீட்டில் சிகப்பு வஸ்திரம் தரித்து கூறி வரவும். முடியாதவர்கள் சிகப்பு வஸ்திரம் தரித்து கண் மூடி 3 முறை லலிதா சஹஸ்ரநாமம் ஒலி நாடாவில் கேட்டு வரலாம்.
வியாழகிழமைகளில் இரவு 8-9 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூறி வரவும்