"லாபிஸ் லாஸுலி" என்பது அதன் பெயர். நம் உடலின் ஆறாவது சக்கரமான 'நெற்றி கண்' னை விழிப்படைய வைக்கும் ஆற்றல் பெற்ற இவை அளிக்கும் பலன்கள் அளவிடமுடியாதவை. உடல் ரீதியாக பார்த்தோமேயானால், நோய் எதிர்ப்பு சக்தி, தொண்டை, எலும்பு, சுரப்பிகள் போன்றவை வலுவடையும். மேலும் தூக்கமின்மை, தலை சுற்றல், காது கேளாமை, பின்புற வலிகள், ஏன், எலும்பு முறிவை கூட சரி செய்ய கூடிய ஆற்றல் பெற்றவை இவை.
அதை தவிர, நம் உள்
மன ஆற்றல்களை சரியான திசையில் செலுத்தி அனைத்திலும் வெற்றி பெற செய்யும் தன்மையும், பதட்டமில்லா மன வலிமையையும் தரும். மேலை நாடுகளில் பலர் இந்த கற்களை மேலுலக ஆத்மாக்களை தொடர்பு கொள்ள பயன் படுத்தி வருகின்றனர்.