குபேரரின் வழிநடத்தப்படும் யக்ஷினி மற்றும் யக்ஷர்களை பற்றி பல புராதன கிரந்தங்கள் நமக்கு வழிகாட்டியுள்ளன. இதில் "தந்த்ரராஜதந்த்ரம்" மற்றும் "உத்தமரேஸ்வரதந்தரம்" மிக முக்கியமான ஒன்றாகும். யக்ஷினிகளை வைத்து பல காரியங்களை, ஏன் முடிக்க முடியாத அனைத்து விஷயங்களையும் முடிக்கலாம் என கூறியுள்ளன அந்த புராதன நூல்கள். இவை மிகுந்த உண்மையும் கூட. ஆனால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று இந்த யக்ஷினி வழிபாடு. தற்காலத்தில் அரைகுறை ஞானத்தோடு பலர் இந்த யக்ஷினி தீக்ஷைகளை கொடுத்து வருவதை காண்கிறேன். கேரளாவில் உள்ள ஒரு நபர், ஒடிஷாவில் இருக்கும் ஒரு தாந்த்ரீகரின் மூலம் யக்ஷினி உபாசனை பெற்று, பின் அதனால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி, பின் எப்படியோ கேள்விப்பட்டு எம்மிடம் ஆலோசனைக்கு வந்து சேர்ந்தார். தகுந்த மாற்று வழிகூறி அவரை அந்த யக்ஷிணியின் ஆற்றலில் இருந்து வெளிவரவைக்க பெரும் பாடு பட வேண்டியதாயிற்று, யக்ஷினிகளை நம் தேவைக்காக உபாசனை செய்யலாமே தவிர புரஸ்சரணம் செய்வதென்பது    தகுந்த குரு தமக்கு உதவும் நிலையில் எந்நேரமும் இருந்தால் மட்டுமே செய்யக்கூடும். உபாசனை என்பது அன்றாட வழிபாடு. புரஸ்சரணம் என்பது கடுமையான நியம நிஷ்டைகளோடு தகுந்த தேவதை/எட்சிணியை அழைத்து காரியம் சாதிப்பது எனலாம். இந்த பதிவில் 34 எட்சிணிகளின் வகை பற்றி கூறியுள்ளோம். பலர் மொத்தமே 36 யட்சிணிகள் தான் என நினைத்து கொண்டு உள்ளனர். யட்சிணிகள் பல உண்டு. 36 என்பது அதன் வகைகள் மட்டுமே.

விசித்ரா
விப்ரமா
ஹம்ஸி
பிஷாஷினி
ஜனரஞ்சிகா
விஷாலா
மதனா
கண்ட்டா
கலகர்ணி
மஹாபயா
மஹேந்திரி
ஷங்கினி
சந்திரி
ஷ்மஷனா
வடயக்ஷினி
மேகலா
விகளா
லக்ஷ்மி
மாலினி
ஷடபத்ரிகா
ஷுலோச்சனா
ஷோபா
கபாலினி
வரயக்ஷினி
நடி
காமேஸ்வரி
மனோஹரா
ப்ரமோதா
அனுராகினி
நாககேஷி
பாமினி
பத்மினி
ஸ்வர்ணவதி
ராத்ரிப்ரியா

இவைகளில் ஒரு சில, மிகுந்த புகழ்பெற்ற லக்ஷ்மி துதிகளில் கேட்டது போல் உள்ளது அல்லவா ?

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியங்களை சாதித்து கொடுப்பதில் வல்லவர்கள் என்கிறது "தந்த்ரராஜதந்த்ரம்". அவைகள் என்னென்ன என்பதை அடுத்து வரும் பதிவுகளில் கூறுகிறேன்.



Post a Comment

Previous Post Next Post

Get in touch!