(1) இனம் தெரியாத பயம், படபடப்பு, பயத்தினால் தூக்கமின்மை உள்ளோர்கள் செந்நாயுருவி வேரை தாயத்தில் அடைத்து கழுத்தில்,கைகளில் கட்டி கொள்ள மேற்கண்டவை நீங்கும். எந்த நாளும் செய்யலாம். நல்ல நேரம் மட்டும் பார்த்தால் போதுமானது.வேறு எந்த நிபந்தனையும் இல்லை.ஜாதகத்தில் கேது-சந்திரன், சந்திரன்-செவ்வாய், சனி-சந்திரன் சேர்க்கை உள்ளோர் அவசியம் அணிதல் நன்று. மேலும் அஸ்வினி, பரணி, ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் இதை அணிய நன்மைகள் பல நேரும்.
(2) மன நிம்மதி இல்லாமல் அவதிப்படுவோர் வெள்ளை அரளியை தன்னோடு வைத்திருக்க மனம் அமைதி பெரும். முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறும் சமயங்கள் மற்றும் தன்னம்பிக்கை குறைவான சமயங்களில் சிவப்பு அரளியை தம்மோடு வைத்திருக்க மேற்கண்டவை நீங்கும்.
(3) எங்கு சென்றும் நீங்காத உடல் பிரச்னை இருந்து வந்தால், காரணம் தெரியாமல் இருந்தால் பப்பாளி பழம் ஒன்று எடுத்து தலையை வலது புறமாக 27 முறை சுற்றி பின்பு அதை பசுவிற்க்கு கொடுக்க, உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும். குழந்தைகள் திருஷ்டியால் அழுது கொண்டே இருந்தால் பப்பாளி மரத்தின் இலையை சிறிது நேரம் குழந்தையின் நெற்றியிலோ அல்லது வயிற்றிலோ வைத்திருக்க, திருஷ்டி நீங்கி அழுகை நிற்கும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!