எம்மிடம் வரும் பலர் தங்களின் பரஸ்பர கணவன்-மனைவி உறவில் மிகுந்த சிக்கல்களுடன் தான் காணப்படுகிறார்கள் !! அப்படிப்பட்டவர்களுக்கு அருமையான பரிகாரங்கள் உள்ளன.
அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது !! செய்து வாழ்வில் வசந்தம் காண்பவர்கள், விஷயத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வுருவேன் !!
அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது !! செய்து வாழ்வில் வசந்தம் காண்பவர்கள், விஷயத்தை பகிர்ந்து கொண்டால் மகிழ்வுருவேன் !!
பெரிய தலையனை ஒரே தலையணையாக உபயோகப்படுத்தவும்.மனைவி கணவருக்கு இடது புறம் படுத்து உறங்கவும் !! அடிக்கடி அபிப்பிராய பேதம் அல்லது சண்டை வராமல் இருக்க வெள்ளியன்று சிறிது பன்னீர் ரோஜா இதழ்களை வாங்கி, படுக்கும் கட்டிலின் அருகில் வைக்கவும். கணவர் மனைவி இருவரும் சேர்ந்து வெள்ளியன்று வெள்ளை நிற பூக்கள் வாங்க வேண்டும். தலையில் சூடும் வழக்கம் இருந்தால் சூடி கொள்ளலாம்,இல்லையெனில் கடவுள் படத்திற்க்கு இருவருமாக சேர்த்து இட்டு வரலாம்.
கடவுள் படங்கள் எதுவும் படுக்கும் அறையில் இல்லாமல் பார்த்து கொள்ளவும் !! மேலும் கிழக்கு அல்லது தெற்கு பகுதியில் தலை இருக்கும்படி படுத்து உறங்கவும் !! நீர்வீழ்ச்சி ஒன்றின் படத்தை இருவரும் பார்க்கும் படி கண் எதிரே ஒட்டி வைக்கவும் குழந்தை வேண்டுபவர்கள் முயல்கள் இரண்டுக்கு மேல் இருக்கும்படியான படத்தை ஒட்டி வைத்து பார்த்து வரலாம் !! வெள்ளியன்று மட்டும் படுக்கும் சமயம் இருவரும் சேர்ந்து வாங்கிய வெள்ளை நிற பூவுடன் வெள்ளை நிற இனிப்பு வைத்து கொடுத்துள்ள இந்திரன் படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி நிவேதனம் செய்து பின்பு இருவரும் அதை உண்டு, பின்பு படுக்க செல்லலாம். கட்டிலின் நான்கு பக்கத்திலும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற ரிப்பன் கட்டி வைக்கவும் !! பிங்க் நிறத்தில் உள்ள போர்வையை உபயோகிக்கலாம். படுக்கை அறை பிங்க் நிறமாக இருப்பின் மேலும் நலம் சேர்க்கும் !!
மேற்கண்டவை மிகுந்த பலன் அளிப்பவை !! செய்து பயன் அடையுங்கள்..தற்காலத்தில் ஒற்றுமையான, பரஸ்பரம் மிகுந்த அன்பு கொண்ட,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்லும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது !!