பிரதமை குபேர வழிப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற நாள். இந்நாளில் குபேர வழிபாடு செய்ய, அனைத்து சம்பத்தும் கிட்டும். கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரலாம்.செல்வம் கொழிக்க நாம் ஏற்கனவே கொடுத்துள்ள குபேர கோலம் போட்டு குபேர பூஜை செய்யலாம். மேலும், இந்நாள் கடன் வாங்க மற்றும் கொடுக்க மிகவும் ஏற்ற நாள். இந்நாளில் கடன் வாங்கினால் மிக எளிதாக அடைத்து விட முடியும். கொடுத்தவராகில் ஏமாற்றம் இல்லாமல் பணம் திரும்ப வரும் என நம்பலாம். மேலும், வீடு மராமத்து வேலைகள், வீடு,வியாபார ஸ்தலங்களில் உள் அலங்கார வேலைகளுக்கு மிகவும் ஏற்ற நாள்.
மந்திரம் : 'ஷம்' (மனதிற்குள் கூறி வரவும்)