குறிப்பு : ஆடுகளை உணவாக கொள்ளாதவர்களுக்கு மட்டுமே கீழ்க்கண்டவை பயன் கொடுத்துள்ளது .
தொடர்ந்த துர் அதிர்ஷ்டம், எல்லா விஷயங்களிலும் தோல்வி மற்றும் முடியும் என்று கடைசி வரை சென்று முடியாமல் போகும் காரியங்கள், ராகு திசை மற்றும் புத்தி ஜாதகத்தில் இருப்பின், அஷ்டமத்தில் ராகு, காலை எழும் பொழுது சோம்பல், இரவு அதிக நேரம் தூங்காமல் இருப்பவர்கள், துர் சகவாசம் உள்ளோர், குடியின் வசம் சிக்கி தவிப்போர் போன்ற அனைத்திற்கும் ஆடுகள் கொட்டகையில் அமர்ந்து தினமும் சிறிது நேரம் அவைகளை கண்டு வந்தாலோ அல்லது அவைகளின் படத்தை வைத்து தினசரி 15 நிமிடங்கள் பார்த்து வந்தாலோ மேற்கண்ட பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முடிவில் மாற்றம் நிகழும். மேஷம் மற்றும் ரிஷப ராசியினர் பார்த்து வந்தாலும் பயன் தரும்.மேலும் குழந்தை பேறு தாமதமாவோரும் பார்த்து வர பலன் உண்டு.
படிப்பில் நாட்டமில்லாத குழந்தைகள் மற்றும் வியாபாரத்தில் தொடர் நஷ்டம் கண்டு வருவோர் புதன் கிழமை அன்று மதியம் 1-2 க்குள் ஆடுகளுக்கு பச்சை கீரைகள் தொடர்ந்து வாங்கி கொடுத்து வர கல்வி அறிவு மேம்படும்-வியாபாரம் செழிக்கும். குறிப்பாக ஜோதிடர்கள் இதை செய்து வரலாம்.வாக்கு வன்மை கூடும். ஜாதகத்தில் புதன் நீச்சமாக இருப்போரும் வாழ் நாள் பரிகாரமாக இதை செய்து வர நல்லவை நடக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Get in touch!