பலர் தொடர்ந்து எவ்வளவோ உழைத்தும் வியாபாரம் அல்லது தொழில் முன்னேறாத நிலை, அப்படியே தொழில் நடந்தாலும் கையில் பணம் தங்காமை, கடன் பிரச்னை போன்றவற்றிற்கு காரணம் குறிப்பிட்ட நபருக்கு மற்றும் அவர் தொழில் செய்யும் ஸ்தலத்திற்கு வசீகரத்தன்மை இல்லாதது ஒரு முக்கிய காரணம் ஆகும். அப்படிபட்டோருக்கு நிரந்தரமாக தீர்வு தர நாம் கொடுத்து வரும் தாந்த்ரீக தீர்வுகள், உடனடி பலன் கொடுத்து வந்துள்ளன. ஆனால் சிலருக்கு அப்படி செய்து கொள்ள முடியாதபடி அவர்களின் பொருளாதார சூழ்நிலை இருப்பின், அவர்களுக்கு தற்காலிக தீர்வாக வியாபார வசீகர தன்மை கொண்ட திலகம் பயன் பெரும். மேலும் இது போன்ற திலகம் கணவன்-மனைவி ஒற்றுமைக்கும் கொடுத்து வருவதுண்டு-திருமணம் ஆகாத ஆண்-பெண்களுக்கு இவை வழங்கப்பட மாட்டாது. இது போன்ற திலகங்கள் 'ராஜ வசியத்திற்கு' , தற்காலத்தில் அரசியில் பிரமுகர்களுக்கு  பயன்படும்-கட்சியில், மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கை  இது போன்ற திலகங்கள், மேலும் சில முறைகளின் மூலம் பெறலாம். கீழே

இது போன்று ஒரு முறையை விளக்கி இருக்கிறேன். முடிந்தவர்கள் தாங்களே செய்து கொண்டு பயன் பெறலாம்.

சத்துரு வசியம்- எதிரிகள் அடங்க செவ்வாய் கிழமை காலை 6-7 க்குள் பொன்னவரை வேரும், கையான் வேரும் மற்றும் ஒரு வெள்ளருக்கு இலையும் ஒரு விஷ்ணு காந்தி இலையும் சேர்த்து கருக்கி மையாக்கி இட்டு கொண்டால் எப்பேர்பட்ட சத்துருவும், நம்மை கண்டு நடுங்குவான். மேற்கண்ட முறைக்கு வேறு எந்த மந்திரமோ அல்லது சாப நிவர்தியோ கிடையாது. 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!