பல்வேறு நபர்களின்  பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக முறைகளில் நாம் தீர்வு கொடுத்து வருவதில் அரசியலில் முன்னேற்றம்  பெறச்செய்வதும் ஒன்று. அரசியலில் உள்ள பலர் அவர்களின் மேலிடத்தில் நன் மதிப்பை பெற, வேண்டிய பதவி அல்லது காரியம் கை கூட என தேவைகளுக்கு நம்மை நாடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் ஒரு நபர், நல்ல பெயர் கொடுக்கக்கூடிய பதவியில் உள்ளவர் தேடி வந்தார். வந்தவர், இன்னும் 4 நாட்களில் உள்ள தனது கட்சி மீட்டிங்கில், தற்போது உள்ள பொறுப்பு  வேறு ஒருவருக்கு மாற்ற படலாம் என செய்தி வந்தது எனவும், இது பொறாமையினால் அவரை பற்றி தவறான கருத்து மேலிடத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். நான்கு நாட்களுக்குள் இதை மாற்றி கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
ஈசனால் அருளப்பட்ட தாந்த்ரீக முறைகளில் உலகில் உள்ள பிரச்னைகளுக்கு இல்லாத தீர்வே இல்லை. அவரிடம் மறு நாள் வந்து பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்தோம். மறு நாள், வந்தவருக்கு ஒரு திலகத்தை ( மை ) கொடுத்து, அந்த மீட்டிங்கிற்க்கு செல்லும் பொழுது அதை இட்டு சென்று, நேரடியாக தலைமையை சந்தித்து அவரின் நியாயத்தை எடுத்து கூறுமாறு கூறினோம். அவர் என்னையும் அந்த திலகம் அடங்கிய டப்பாவையும் மாறி மாறி பார்த்தார். சார், நான் எவ்வளவு சீரியசான விஷயம் சொன்னேன், இப்படி பண்ணிட்டீங்களே' என்றார். அவர் நம் முறைகளை பற்றி அறியாதவர். மேலும், இங்கே வந்து பார்க்க சொன்ன தன் நண்பரிடமும் முழுதும் விசாரித்து தெரிந்து கொள்ளவில்லை-நம்மை பற்றி. நான் அவருக்கு தைரியம் கூறி, அவரின் நண்பரிடம் மேல் விவரங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தேன். அவரும் தன் நண்பரிடம் விசாரித்து ஓரளவு மன தைரியம் பெற்றார். குறிப்பிட்ட நாள் முடிந்த அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து பரவசமாக என்னை உடனடியாக பார்க்க வேண்டும் என்றார். நேரில் வந்தவர், திலகத்தை இட்டு சென்றதாகவும், மேலிடத்தை தனியாக சந்திக்கவே முடியாது என நினைத்து கொண்டிருந்தவர், திடீர் மாற்றமாக நேரில் சந்திக்க முடிந்து, தன்னிலை விளக்கமும் கொடுத்து விட்டார். கண்டிப்பாக, தனக்கு சாதகமாக தான் முடிவு வரும் என்றும், எப்படி ஒரு சாதாரண திலகத்தால் இத்தகைய மாற்றம் வரும் என ஆச்சரியப்பட்டார். பல அபூர்வ மூலிகைகள், வேர்கள் மற்றும் புல்லுருவிகளுக்கு சில பிரயோகங்கள் மூலம் அப்படிப்பட்ட சக்தியை ஏற்ற முடியும்-நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தினால் உடனடி வெற்றி தரும் என கூறி அனுப்பி வைத்தோம்.

இதில் என்னை பொறுத்தவரை ஒரு ஆச்சரியமும் இல்லை, பல திரைத்துறையினர் மற்றும் சின்ன திரையில் உள்ளோர் மற்றும் அரசியல் போன்று பொது வாழ்கையில் உள்ளோருக்காக பலம் வாய்ந்த 'சர்வ ஜன வசியம்' மற்றும் ராஜ வசியம் செய்யும் மூலிகைகளும், சித்தர் மற்றும் தாந்த்ரீக முறைகளும் நமது சித்தர்களாலும், முன்னோர்களாலும் அருளப்பட்டு உள்ளன.  தகுதியுள்ள நபர்கள் தேடி அடைவர்.

பொதுவாக அரசியலில் உள்ளோர் வெற்றி நிலைக்க வேண்டுமானால், தினசரி சிறிது அச்சு வெல்லம் தங்கள் கைகளால் மாடு மற்றும் குரங்கு, எதற்கு முடிகிறதோ அதற்கு கொடுத்து வர பிரகாசமான அரசியல் நிலை உருவாகும். அதே போன்று திரைத்துறையில் உள்ளோர் மாதுளம் விதைகளை முடிந்த போதெல்லாம், குருவி, புறா (குறிப்பாக வெள்ளை புறா) மற்றும் ஆட்டிற்கு கொடுத்து வர திரையில் வெற்றி காணலாம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!