நம் கிரந்தங்களில் பரிகார வகைகளை வரையறுக்கும் விதத்தில் ஒன்றாக குளியல் பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. பழங்காலத்தில் குறிப்பிட்ட சில மூலிகைகளை, இலைகளை போட்டு குளித்து, தேவையான கிரகங்களின் சக்தியை பெற்று துன்பங்களை போக்கி வந்தனர். இவை இன்றும் வட இந்தியாவின் சில மாநிலத்தோர் செய்து வருவதுண்டு. மேலை நாடுகளில் இவை வெகு பிரசித்தம். இது போன்ற பரிகாரங்களை நாமும் ஏற்கனவே கொடுத்து பலர் உபயோகித்து பலன் கண்டும் வந்துள்ளனர்.
பணத்தை ஈர்க்கும் சக்தி பல மூலிகைகளுக்கு உண்டு. அவற்றின் எண்ணெய்களை உபயோகித்து குளித்து வர, பண ஈர்ப்பு சக்தி நம்மையும் வந்தடையும்.
வெது வெதுப்பான அல்லது சூடான குளிக்கும் நீரில் 6 ஒரு ருபாய் நாணயங்களை இட்டு, பின் இஞ்சி, வெட்டிவேர் அல்லது துளசி எண்ணையில் ஏதேனும் ஒன்றை 4 சொட்டுகள் விட்டு, 3 நிமிடங்கள் அந்த நீரை உற்று நோக்கவும். பின் தங்களுக்கு தேவையான நியாயமான தொகையை மனதில் நினைத்து குளிக்கவும். முடிந்ததும் அந்த நாணயங்களை எடுத்து தங்கள் பர்சில் தனியாக வைத்து வரவும். அதையே தினசரி உபயோகிக்கலாம். பல் வேறு சூட்சுமங்களை கொண்ட பரிகாரம் இது.
குறிப்பு : அந்த எண்ணெய்கள் அனைத்து ஆர்கானிக் அங்காடிகளில் கிடைக்கின்றன.