முக்கிய குறிப்பு : இதை உறவுகள் பலப்படவும், அன்னியோன்னியம் பெருகவும் மட்டுமே உபயோகப்படுத்தவும். அதீத சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தவறான காரணங்களுக்கு உபயோகப்படுத்தினால், தகுந்த சேதங்கள் வந்து சேரும்.
மாலை குளித்து தூய ஆடை உடுத்தி ஒரு மனையில் அமர்ந்து, முதுகு தண்டு வடம் நிமிர்ந்த நிலையில் இருத்தி, மூச்சினை சீராக்கி, முன் புறம் வலது பக்கம் 8 மண் அகலில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் விளக்கேற்றி, இடது பக்கம் 6 மண் அகலில் வெள்ளை திரியிட்டு நெய் விளக்கேற்றி வைத்து, ருத்ராட்ச ஜெப மாலையை கொண்டு தொடர்ந்து கீழ்கண்ட மந்திரத்தை 1008 முறை ஜெபிக்கவும். மந்திரத்தை கூறும் பொழுது, கணவன்/ மனைவி அல்லது நண்பர்கள் என யாரை நினைத்து கூறுகிறோமோ அவர் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தவும். இவற்றை ஒரு முறை மட்டும் செய்தால் போதுமானது. பின், தேவைப்படும் சமயங்களில் ஏதேனும் இனிப்பு அல்லது நீரை கையில் வைத்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஓதி, அதை குறிப்பிட்ட கணவருக்கோ, மனைவிக்கோ கொடுக்க அவர்கள் பரஸ்பரம் வசீகரமாகி அன்புடன் சேர்ந்து வாழ்வர்.
""ஓம் க்லீம் க்லீம் ஸ்வாஹா"