சித்ரா பௌர்ணமி சித்ர குப்தரின் சிறப்புகள்

10.5.17 அன்று நாம் செய்யும் பூஜை, நம் அன்றாட வாழ்வில் காரணம் தெரியாமல், எவ்வித குருமார்களோ, ஜோதிடர்களிடத்தோ  சென்றும் பலனில்லாமல் தவித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். பிரம்மபுத்திரரான சித்ர குப்தருக்கு மட்டுமே நம் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் வீரியம் முழுமையாக உண்டு.

பல காலமாக வாழ்வியல் துன்பங்களுக்கு ஆளாவது, நம் இந்த ஜென்மாவிலும், பூர்வ ஜென்மாவிலும் சேர்த்து வைத்த, வைத்துக்கொண்டிருக்கின்ற கர்ம வினைகளே ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலருக்கு, எவ்வித சக்தி படைத்த மானுடராலும், எவ்வித முயற்சியினாலும் தொடர் துன்பங்களே சுற்றி சுற்றி சுழலும். இதை அடியோடு அழிக்க வல்லது மேற்கண்ட பூஜை. மேலும், இந்நாளில் ஈசனை குளிர வைக்க 108 இளநீராலும், வில்வ இலைகளினாலும் ருத்ர ஜெபம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. அனைவரும் இனி தினசரி அவரை உபாஸிக்க மிக அதீத சக்தி வாய்ந்த சித்ர குப்த உபாசனையும் வழங்க உள்ளோம்.

இந்நாளில் அபிஷேகத்திற்கு இளநீர், வில்வ இலைகள், பூக்கள் போன்றவை கொடுத்து அவரின் பரிபூர்ண ஆசியை பெறலாம். மேலும், மண்டபம், சுத்தம் செய்வோருக்கான கட்டணங்கள், வாத்தியார் தட்சிணை போன்றவை கொடுத்து இந்த வைபவத்தில் பங்கு பெற நினைப்போர் கீழ்கண்ட எண்ணை அணுகவும்.

மிக முக்கிய குறிப்பு : சித்ர குப்தரின் ஆசியோடு இந்நன்னாளில் அனைவருக்கும் நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கப்படுகிறது. இந்நாள் முதல் தங்கள் வரவு கணக்குகளை  இப்புத்தகத்தில்  எழுதி வர, நம் விருப்பங்களை எழுதி பூஜித்து வர, மிக குறுகிய காலத்தில் நம் நிலை மேம்பட்டு, செல்வ நிலை மேலோங்கி, வாழ்வாங்கு வாழலாம் என்பது உறுதி.  (  இந்த நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்க உதவுவது  புதனின் பரிபூர்ண அனுக்கிரகத்தை பெற உதவும். தொழிலில் வளர்ச்சி, படிப்பில் தேர்ச்சி, மற்றும் செல்வ நிலை உயருதல் போன்றவை இந்த செய்கையினால் வளரும் என்பது ஜோதிட சூட்சுமம்)

சித்ரா பூவுர்ணமி பூஜை : பாணி கிரஹா மண்டபம், ஆர்ய கவுடா ரோடு,  மேற்கு மாம்பலம், சென்னை :33
நாள் : 10.5.17
நேரம் : மாலை 5
மணி முதல்
தொடர்பிற்கு : +919840130156

Post a Comment

Previous Post Next Post

Get in touch!