மேற்கண்ட துறைகளில் பலர், தங்களின் நிரந்தர வேலையை விட்டு விட்டு,
கோடீஸ்வரன் ஆகிறேன் பேர்வழி என்று இறங்கி அதலபாதாளத்தில் வீழ்ந்து துன்பப்படுவதுண்டு. மேலும் சிலர், அடுத்தவர்களின் பணத்தையும் வாங்கி அவர்களுக்கு லாபமீட்டி தருகிறேன் என மேற்கண்ட தொழிலில் , அவர்களின் பணத்தையும் சேர்த்து அழித்து, மிக பெரும் கடனாளியாகி சிக்கி தவிப்பதுண்டு. இது போன்ற யூக வியாபாரங்களில் இறங்குவதற்கு முன், மிக அவசியமாக, நன்கு விவரமறிந்த ஜோதிடர்களிடம் ஆலோசனை பெறுவது பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும். எம்மிடம் தனி நபர் ஆலோசனைக்கு வருவோரில், இதை போன்றோர் அதிகம் உள்ளர். சில ஆயிரங்களை யோசித்து,மிக பெரும் அவதிக்கு உள்ளாகி பின் ஆலோசனைக்கு வருவதை விட,முன்னரே தகுந்த ஆலோசனையின் படி செயல்பட்டால் பல லட்சங்களை அழிப்பதை தவிர்க்கலாம். முதலில் அவர்களுக்கு இந்த துறை ஏற்றதா என்பதை ஆராய்ந்து பின் அவர்களுக்கு தக்க பரிகார முறைகள் கூறுவது வழக்கம். இதில், சிலர் அடுத்தவர்களுக்காக சந்தையில் ஈடுபடும் பொழுது லாபம் ஈட்டிவிடுவதாகவும், தனக்கென வரும் சமயம் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக கூறுவதுண்டு. இவைகளுக்கு பின்னால் பெரும் சூட்சும விஷயங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக ஒவ்வொருவருக்கும் எந்தெந்த துறை ஷேர் அல்லது கமாடிட்டி லாபம் ஈட்டி தரும் என ஒன்று உண்டு. அதை தெரிந்து கொண்டு மற்றும் அந்த மாதம் எந்த துறை ஏற்றம் பெறும், எது வீழ்ச்சியை தரும் என்பதையும் தெரிந்து கொண்டு ஈடுபடுவது சாலச்சிறந்தது. தங்கள் நிலையை அறிந்து, பேராசையும் பதட்டமும் இல்லாது, தகுந்த முறையில் ஈடுபட்டால், இந்த துறை மட்டுமல்ல,
ஹரி ஓம் தத் சத்
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com