நம் உடலில் சூஷ்ம ரூபத்தில் செயல்படும் ஏழு சக்கரங்களையும் சமநிலையில் வைத்திருப்பின், அனைத்து செயல்களிலும் வெற்றியும், அதீத பொருட் சேர்க்கையும், வியாதிகள் இல்லாத வாழ்வும் ஏற்படும். இவற்றை மனதில் கொண்டு, மிக சுலபமாக இந்த ஏழு சக்கரங்களையும் சம நிலையில் வைத்திருக்க பயிற்சி ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் நாள் சென்னை மேற்கு மாம்பலம்,கவரை தெரு -ஏ.எம்.ஆர் திருமண மண்டபத்தில் மாலை நான்கு முதல் ஏழு வரை நடத்த திட்டம். இடப்பற்றாக்குறை கருதி இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி. பொதுவாக இது போன்று பயிற்சி அல்லது நிகழ்ச்சிகள் அனைத்தும் நாம் கட்டணம் இன்றியே நடத்தி வந்துள்ளோம். இம்முறை இதை நடத்தும் 'ஷீர்டி ஸ்ரீ சாய் சேவா டிரஸ்ட்டிற்கு" நபர் ஒருவர் ருபாய்.நூறு மட்டும் (Rs.100/-) நன்கொடையாக செலுத்தி, அலுவலகத்தில் டோக்கன் பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள், வங்கியில் நேரடியாக செலுத்தாமல் டிரான்ஸ்பர் செய்யவும். பின் தொலைபேசியில் அழைத்து தகவல் தெரிவிப்பின், பதிவு செய்து கொள்ளப்படும். மேற்கொண்டு விவரங்கள் தேவைப்படின், தொலைபேசியில் அழைக்கவும். குறிப்பிட்டுள்ள நபர்கள் பதிவு முடிந்தபின், வேறு பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
குறிப்பு : மேற்கண்ட டிரஸ்டின் மூலம் நாம் கட்டணமின்றி ஆன்மீக மற்றும் மருத்துவ சேவைகள் செய்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. உங்கள் வசதிக்குட்பட்டு நன்கொடைகள் வழங்கி இந்த சேவைகளில் நீங்களும் உங்களின் பங்களிப்பை மற்றும் ஆதரவை கொடுக்கலாம்.