சமீபத்தில் நடந்த இரு மகிழ்ச்சியான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். உங்கள் அனைவருக்கும் இவை ஒரு புதிய புரிதலாக இருக்கும். இரு பெண் அன்பர்கள் சமீபத்தில் ஆலோசானைக்கு வந்து பரிகாரங்கள் கொடுக்கப்பட்டன. முதலாமவர்க்கு வேலை கிடைக்கவேண்டும், அதுவும் உடனடியாக என்பது போல் நிலை. இரண்டாமவர்க்கு பல வருடங்களாக முயன்றும் சொத்து ஒன்று வாங்க முடியாமல் தடை, மேலும் சொத்து ஒன்றினை விற்க வேண்டும். ஒரு மாதமாகியும், பரிகாரங்கள் செய்யப்பட்டும், விஷயங்கள் நடை பெறாமல் இழுபறி நிலையில் இருக்கவே, முதலாமவர் அழைத்து, இனியும் வேலை கிடைப்பது தாமதமானால் சிறிது சோதனைகளை சந்திக்கவேண்டும் என்கிறார். மிகுந்த அலசல்களுக்கு பிறகு, அவருக்கு 'காலசக்ர தந்த்ர' முறைப்படி, வண்ணம் ஒன்றை உபயோகிக்கவும், தவிர்க்கவேண்டிய வண்ணத்தையும், மேலும் அதன் உபயோக முறையும் விளக்கப்பட்டது. இது நடந்து முடிந்த ஒரு வாரத்திற்குள் அவர் தொலைபேசியில் அழைத்து வேலை கிடைத்ததாக கூறி மகிழ்ந்தார். இரண்டாமவருக்கும் இது போன்றே, அவருக்கு உகந்த வேறு வண்ண முறைகளை கூறி விளக்கவும், பத்து நாட்களுக்குள் அவருக்கு பல வருடங்களாக அமையாது இருந்து வந்த சொத்து ஒன்று அமைந்து, கடந்த புதனன்று அக்ரீமெண்ட்டும் போடப்பட்டு விட்டது. இனி, விற்பனை மட்டும் பாக்கி. 'காலசக்ர தந்த்ரம்' 'ராவண சம்ஹிதை' போன்றவை மிக வலிமை மிக்க உடனடி பலன் கொடுக்கும் முறையாகும். ஆனால், சுலபமாக சில வழிகளை கூறினால், தற்காலத்தில் பலரின் மனம் ஏற்று கொள்ள மறுக்கிறது. நம்பிக்கையுடன் செய்வோருக்கு பலன் கை மேல் கிடைக்கவும் செய்கிறது, 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!