தானாக கீழே விழுந்த காக்கையின் கரு நிற இறக்கை ஒன்றினை எடுத்து கொள்ளவும். பின் வீட்டிற்கு வெளிப்புறம் வந்து, இறக்கையினை இடது கையில் வைத்து, அதன் மேல் வலது கையினை வைத்து மூடி, தன் கவலைகள் தீர ஒரு வாய்ப்பினை கொடுத்த காகத்திற்கு மனதார நன்றி தெரிவித்து, பின் உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலை ஒன்றினை மனதில் நினைத்தவாறே ஒரு கருப்பு நிற மெழுகுவர்த்தி தீபத்தில் அந்த இறக்கையினை நிதானமாக முழுதும் எரிய விடவும். பின் மெழுகு தீபத்தை அனைத்து விட்டு , அவ்விடத்தை கழுவி பின் வீட்டினுள் சென்று கால் பாதங்களை முழுதாக அலம்பவும். பலருக்கு இவை முதன் முறையே வெற்றியினை கொடுத்துள்ளதெனினும், குறிப்பிட்ட கவலை/துன்பம் நீங்கும் வரை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம். முதலில் செய்த அதே நாளில் அதே நேரத்தில் செய்தல் அவசியம். கவலைகளை துன்பங்களை அதிசயத்தக்க வடிவில் நீக்கும் அமானுஷ்ய பரிகாரம் இது.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam