வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 31.3.19 மாலை 3:45 PMஅளவில் சென்னை மேற்கு மாம்பலம் 'சம்ஸ்காரா-சங்கர மடத்தில்' நடக்கவிருக்கின்ற சண்டி ஹோமத்தில் எந்தெந்த பொருட்களை சேர்த்தால் சண்டி தேவிக்கு ப்ரீத்தி செய்யும் முறையாக அமையும் என்பதனை பார்ப்போம்.
காரிய தடை நீங்க :விரலி மஞ்சள்/மஞ்சள் பொடி மற்றும் குங்குமம்
தனவரவு பெருக : தேங்காய்
நற்செய்தி வர : சந்தன வில்லைகள் மற்றும் சந்தனப் பொடி
எதிரிகள் அழிய : பூசணிக்காய்
எதிர்பாராத பணவரவு வர : பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை பேரிச்சை கற்கண்டு போன்ற ஆறு வகை உலர் பழ வகைகள்
வாஸ்து தோஷம் மற்றும் எதிர்மறை சக்திகள் நீங்க :ஊதுபத்தி
நினைத்தது நிறைவேற : நெய்
துர்சக்திகள் நீங்க : வெண்கடுகு
குருவருள் கிட்ட மற்றும் காரியத் தடைகள் நீங்க : வாழைப்பழம்
தேவியின் பரிபூரண அருள் கிட்ட : எலுமிச்சை மற்றும் புஷ்ப வகைகள்.
மேலும் மாதுளை நாரத்தை கொப்பரை வில்வப்பழம் ஆரஞ்சு ஆப்பிள் போன்ற எவ்வித பழவகைகளை சேர்த்தாலும் தேவியானவளுக்கு பரிபூரண திருப்தியும் பிரீதி செய்யும் முறையுமாக இருக்கும்.
எல்லா வகை புஷ்பங்கள் பழவகைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் புடவைகள் காட்டன் புடவைகள் ஆக இருப்பின் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும். தங்களால் முடிந்த மேற்கண்டவற்றை சண்டி ஹோமம் நடக்கும் நாள் முன்னரே நமது சென்டரில் கொடுத்து பரிபூரண அருள் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!