Vamanan Seshadri tips



பணம் சேர ஏஞ்சல் நம்பர் உபயோகிக்கும் சூட்சும முறைகள் |  VAMANAN SESSHADRI 808

பணம் சேர பணம் வர பணம் பெருக செல்வம் வர சுமார் ஒன்னேகால் வருடத்திற்கு முன் ஒரு எண்ணை  உபயோகிக்க யூடியூப் சானல் ஒன்றில் வழங்கியிருந்தோம்.இது போன்ற செல்வம் வர எண்கள் யாருக்கும் சொந்தம் இல்லை, நம்முடைய திருமூலர் மற்றும் வேறு சில சித்தர் பெருமான்கள் மற்றும் மேலைநாட்டில் இது போன்று வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும்  (அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள்) கொடுத்து வந்துள்ள முறையில் அதுவும் ஒன்று. ஆனால் அதில் எம்முடைய பிரத்யேக பிரயோக முறைகளை கொடுத்திருந்தோம். வழக்கம் போல் அதை கண்ட பல யூ டியூப் திருடர்கள் சில பூச்சு வேலைகள் பார்த்து அதை பல்வேறு வீடீயோக்களாக கொடுக்க துவங்கினர். எனினும் 2.5 லக்ஷம் பார்வையாளர்களை நாம் கொடுத்திருந்த காணொளி தொட்டு விட்டதால்,பெரும்பான்மை பார்வையாளர்கள் போலி எது என அறிந்து கொண்டனர். இதில் நகைச்சுவை என்னவென்றால் அந்த சானலிலேயே அது போன்ற வீடீயோக்கள் வரத்துவங்கின. 

அந்த எண்களை பற்றிய மேல் விவரம் அறிய இதில் க்ளிக் செய்யவும். இங்கே, அந்த எண்ணை மேலும் எப்படி எல்லாம் உபயோகம் செய்தால் அதிக பலன் பெறலாம் என்பதை இந்த பதிவில் அறியலாம்.

இது போன்ற ஏராளமான எண்கள் உள்ளன.பல்வேறு பணவரவு உயர,பணம் வர பணம் சேர செல்வம் வர என அவற்றை உபயோகம் செய்து கொள்ளலாம். அதை பற்றி அறிய இதில் க்ளிக் செய்யவும்.

பொதுவாக இது போன்ற எண்களை முடிந்தளவு மனதில் எதற்காக கூறுகிறோமோ அதை நினைவில் கொண்டு கூறிவருவது அதிக பலன் தரும்.இதை ஆண்  பெண்கள் இருவரும் அனைத்து நாட்களிலும் கூறிவரலாம். நேர கட்டுப்பாடு இல்லை.அது போன்று தான் தற்சமயம் கொடுக்கப்படும் விஷயங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. 

1. எண்ணை கூறி பாடலாக பாடி வருவது அதிக பலனை தரும்-ஒரு வார்த்தை என்றாலும் அதை உங்கள் வசதிக்கு தகுந்த மனதிற்கு பிடித்த மெட்டினை வைத்து மனதிற்குள் பாடி கொண்டே இருக்கலாம்.

உங்களுக்குரிய ஏஞ்சல் நம்பர் எது தெரிய வேண்டுமா ? இதை க்ளிக் செய்யவும் 

2. தினசரி காலை எழுந்ததும் மற்றும் இரவு தூக்கம் வரும் முன் உங்களுக்காக 10 நிமிடம் ஒதுக்கி எதற்காக செய்கிறீர்களோ அதை நினைவில் வைத்து கண்களை மூடி எந்த எண்ணை புருவ மத்தியில் நிறுத்த முயற்சிக்கலாம். வெள்ளை நிறத்தில் வருவது அதிக பலன் தரும். பலருக்கும் இது போன்று வெள்ளை நிறத்தில் உடனடியாக வந்து விடுவதில்லை.அதற்காக வருந்த தேவையில்லை.புருவ மத்தியில் நிறுத்தினாலே பலன் வந்து விடும். பத்து நிமிடங்கள் செய்தால் போதும். 

எண்களின் மாய சக்தி-மிகுந்த பலன் தரும் எண் எது? செலவின்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும் 

3. 15 நிமிடங்கள் வரை எரியும்படியான பச்சை, பிங்க், பர்பிள் வண்ணத்தில் உள்ள மெழுகுவத்திகள் வாங்கி கொள்ளவும். அதில் இந்த எண்ணை சிறு குச்சி அல்லது பின்னூசி கொண்டு எண்ணை எழுதவும்.பின்னர் அதை எரிய விட்டு,வசதியான தூரத்தில் அமர்ந்து தீபத்தை நோக்கியவாறே எண்ணை மனதினுள் கூறி வரவும். இதை நேரம் கிடைக்கும் பொழுது செய்தால் போதும். ஒரு நாளிற்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும். 

மாயங்கள் புரியும் ஏஞ்சல் நம்பர் பற்றி அறிய இதில் க்ளிக் செய்யவும் 

4. காற்றில் அவ்வப்பொழுது எழுதுவது (கைகளால் சைகை மூலம்) 

5. குளிக்கும் நீரில் எண்ணை எழுதுவது போல் செய்து செய்து குளிப்பது (இதை குடிக்கும் நீரிலும் செய்யலாம்-கைகளை சுத்தமாக வைத்து கொண்டு செய்யவும் )

6. எண்ணை மனதில் கூறியவாறு ஆட்காட்டி விரல் மற்றும் நாடு விரல் கொண்டு புருவ மத்தியில் மெதுவாக ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் தட்டி கொள்ளலாம்.இதை 54 முறை செய்தால் போதும். இதையும் தினசரி ஒரு முறை அல்லது சமயம் கிடைக்கும் பொழுது செய்தால் போதும்.

மேலும் ஆயிரக்கணக்கான முறைகள் இந்த மாதிரியான எண்கள் மற்றும் ஏஞ்சல் நம்பர்ஸ் பிரயோகம் (உபயோக முறை) எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முறைகளை உடனடி பலன் பெற உபயோகிக்கலாம்.ஏதேனும் ஒரு முறிய அல்லது இரண்டு முறை மட்டும் தினசரி உபயோகித்து முயற்சித்து பாருங்கள். இப்படியே மேற்கண்ட 6 முறைகளில் உங்களின் ஆற்றலுக்கு தகுந்த முறை உங்களுக்கு வேகமாக பலன் தரும் முறை எது என கண்டு அதை வாழ் முழுதும் தொடர்ந்து வரலாம். 

அன்பிற்கினிய ஞான திருடர்களுக்கு : வழக்கம் போல் இந்த பதிவுகளையும் திருட முயற்சித்தால், DMCA அமைப்பினால் உங்கள் இணைய தளம் அல்லது யூ டியூப் சானல் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எம்முடைய அனைத்து பதிவுகளும் காபி ரைட் செய்யப்பட்டவை. இனி, வேறு இடத்தில முயற்சியை தொடரவும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!