நரசிம்ம பிரபத்தி ஸ்லோகம்-NARASIMHA PRAPATTI IN TAMIL LYRICS
நரசிம்ம பிரபத்தி ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகளால் அருளப்பட்ட மிக சக்தி வாய்ந்த ஸ்லோகம் ஆகும் -நரசிம்ம பிரபத்தியை தினசரி 11 முறை கூறி வர அனைத்து வித கஷ்டங்களும் துன்பங்களும் தீர்ந்து நரசிம்ம அருள் கிட்டும்-கலி காலத்தில் நரசிம்மர் கண் கண்டதெய்வம் ஆகும்-நாளை என்பதில்லை நரசிம்மனிடத்தில் என்பது சான்றோர் வாக்கு. ஜோதிட விதிகளின் படி செவ்வாய் கிரக அதிபதி நரசிம்மர் ஆவார்-கடன் தீர,கொடுத்த கடன் திரும்ப வர,நோய்கள் நீங்க,எதிரிகள் அழிய,பெண்களுக்கு திருமண தடை நீங்க,மாங்கல்ய தோஷம்-செவ்வாய் தோஷம் நீங்க,வீடு வாங்க,வீடு கட்ட இந்த நரசிம்ம பிரபத்தியை நரசிம்மர் படத்தின் முன் நெய் விளக்கு சிகப்பு திரியிட்டு ஏற்றி வைத்து 11 முறை கூறி பானகம் நிவேதனம் செய்யவும்.
Narasimha Prapatti in English-Narasimha Prapatti Benefits
மாதா ந்ருஸிம்ஹ:
பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ:
ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ:
த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ:
ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ:
பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ யாஹி:
ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ தேவாத்
பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ:
சரணம் ப்ரபத்யே!