வசிய வராஹியை வழிபட்டால் இது தான் நடக்கும் Significance of Vasya Varahi Amman 


Vasya Varahi Homam Poojahomam.org

நாராயணர் ஒவ்வொரு விதமான தர்மத்தை நிலை நாட்ட பல்வேறு ரூபங்கள் எடுத்தார்-அதை தசாவதாரம் என்கிறோம், உண்மையில் அவர் எடுத்த அவதாரங்கள் 15க்கும் மேல். வராஹி தேவியானவள் பக்தர்களின் ஒவ்வொருவிதமான தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு ரூபங்களாக தன்னை மாற்றி அருளாசி வழங்குவது வழக்கம். வராஹி தேவி நான்கு விதமான புருஷார்த்தங்களையும் அதாவது தர்ம அர்த்த காம மோக்ஷ எனப்படும் நான்கையும் மறு கேள்வியின்றி தன்னை நாடுபவர்கள் கோரிக்கைக்கும் அன்பிற்கும் பக்திக்கும் ஏற்ப கொடுப்பவள் ஆவாள்.இந்த தேவியானவள் 24 விதமான ரூபங்களுக்கும் மேல் எடுத்து தன்னுடைய ஆற்றலை மற்றும் அருளை வழங்குபவள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அப்படிப்பட்ட ரூபங்களில் வசிய வராஹி ரூபமும் ஒன்றாகும். 

அபரிமிதமான செல்வத்தை வேண்டுவோர், நிறைவேறாத ஆசைகளை கொண்டோர் மற்றும் வசீகர தோற்றம்-பிறரை மயக்கும் வண்ணம் தேஜஸ் பெற வஸ்ய வாராஹியை வணங்குவது அதீத பலன் தரும். 

வராஹி தேவியின் 108 சரண கோஷம் தினசரி காலை மாலை கேட்டு வர நினைத்த காரியங்கள் நிறைவேறும்-சரண கோஷம் கேட்க இதில் க்ளிக் செய்யவும் 

வராஹி தேவியை வஸ்ய வராஹி மந்திரங்களை கூறி அழைக்கும் சமயம் வஸ்ய வாராஹியாகவும் தூம்ர வராஹி மந்திரத்தை கூறி வழிபடும் சமயம் தூம்ர வாராஹியாகவும் இப்படியே மந்திர சக்தி மற்றும் நம் சங்கல்பங்களுக்கு ஏற்ப ரூப வடிவில் பலன் தருபவள் வராஹி.

 'வஸ்ய' என்ற வார்த்தைக்கு ஈர்ப்பு என்று பொருள் மற்றும் தெய்வீக அன்னை வாராஹி தேவி, ஸ்ரீ லலிதா தேவியின் அனைத்துப் படைகளுக்கும் விதைக்கப்பட்ட உச்ச தளபதி ஆவார் (லலிதா தேவியின் பல்வேறு சக்திகளுள் ஒருவர்). அதேபோல், ஸ்ரீ சம்பத்காரி தேவி யானை குதிரைப்படையின் தளபதி. இதில் ஸ்ரீ வராஹி தேவி ஸ்ரீ லலிதா தேவியின் கையில் இருக்கும் ஆயுதமாக (சுதர்ஷன பெருமாளை போல) திகழ்கின்றார்.

வரும் 28.4.24 சித்திரை பஞ்சமி தினம் தசாவதார ரூபத்திலான பெருமாள் வராஹ அவதாரம் எடுத்த தினம். சாக்த வழிபாட்டில் வராஹரை போல வராஹி தேவியானவள் இருக்கின்றார். இவள், கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி என்பது மட்டுமல்லாமல் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கான அனைத்து தோஷங்களையும் நீக்குபவள் ஆவார். 

இந்நாளில் சென்னை PTMS பட்டாபிராம் அஷ்டபுஜ ஐஸ்வர்ய வராஹி கோவிலில் வராஹ பூஜை மற்றும் வசிய வராஹி ஹோமம் நடைபெற உள்ளது.சங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் வசிய வராஹி மந்திர ஆகர்ஷணம் செய்து ஆகர்ஷண மூலிகைகள் சேர்த்த குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இது வருடம் ஒரு முறை சித்திரையில் மட்டுமே கிடைக்கும். மேலும் நேரில் வரும் (ஹோமம் துவங்குமுன் மாலை 3-3:30 மணிக்குள்) பக்தர்களுக்கு கட்டணம் இன்றி, மஹாலக்ஷ்மியின் அம்சமான பொடி தேங்காய் ஹோமம் முடிந்ததும் வழங்கப்படும். 


ஹோமம் நடக்கும் கோவில் முகவரி :  

வழித்தடம் : https://maps.app.goo.gl/D88TukRYYPUnDHLv8

Sri Selva Vinayagar and Kalyana Raamar Aalayam

ஶ்ரீ செல்வ விநாயகர் அண்ட் கல்யாண ராமர் ஆலயம்

அஷ்ட புஜ ஐஸ்வர்ய வராஹி கோவில்,43M5+H2X, PTMS, Pattabiram, Tamil Nadu 600001


மிக முக்கிய குறிப்பு : நேரில் வருபவர்களுக்கு மட்டும் மஹாலக்ஷ்மி பொடி தேங்காய் கட்டணமின்றி

முன் பதிவு செய்ய 7010049163 எண்ணிற்கு உங்கள் எண் மற்றும் பெயர் வாட்சாப் செய்து கூப்பன் வாட்ஸாப்பில் பெற்று கொள்ளவும் (தொலைபேசியில் அழைக்க கூடாது) 28.4.24 நேரில் மாலை 3 மணியளவில் வந்து வாட்சாப் கூப்பன் காண்பித்து நிஜ கூப்பன் பெற்று கொள்ளவும்-ஹோமம் முடிந்ததும்  மஹாலக்ஷ்மி பொடி தேங்காய்பெற்று கொள்ளவும்-இதனை உங்களின் பீரோவில் வைக்க ஐஸ்வர்யம் பெருகும்.

சங்கல்பம் செய்து வஸ்ய வராஹி ஆகர்க்ஷண குங்கும திலகம் பெற இதில் க்ளிக் செய்யவும் 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!