சோபா மற்றும் கட்டில் பெட்டில் அமர்ந்து உணவு உண்பதை அறவே தவிர்க்கவும். கூடிய மட்டும் சமைலறையில் அமர்ந்து உண்பது பாப கிரகமான ராகுவிற்கு ப்ரீதி செய்யும்.
மஞ்சளை நெற்றியில் இடுவது, மஞ்சள் மலர்கள் ஏழு எண்ணிக்கையில் அம்பாளுக்கு கோவிலில் கொடுப்பது, மற்றும் மஞ்சள் நிற எலுமிச்சை சாதத்தை தானமளிப்பது போன்றவை அவ்வப்போது செய்து வரின், பணப்புழக்கம் கூடி வரும்.
பணப்புழக்கம் அதிகரிக்க முடிந்த பொழுதெல்லாம் குரங்குகளுக்கு உணவளிக்க வேண்டும்-குறிப்பாக வெல்லக்கட்டி கொடுக்கலாம்.
மீன்களை உண்ணாதிருப்பதும், குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவளிப்பதும் பண வரவை உண்டு செய்யும்- கோதுமையை சிறு உருண்டைகளாக்கி இட்டு வரலாம்.
தெரு நாய்களை அடித்து துன்புறுத்தாமல், அவைகளுக்கு உணவிடுவது பாப கிரகமான கேதுவை ப்ரீதி செய்யும். எல்லா காரியங்களிலும் வரும் தடையை நீக்கும்.
கழுதைக்கு உணவிடுவது, குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்து வரின், வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உடல் ரீதியான தொல்லைகள் நீங்கும்.
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com