பல உடல் கோளாறுகள், உடல் பருமன், தலைவலி, நீரிழிவு, தீராத வயிற்று வலி, முதுகு மற்றும் கழுத்து வலி மேலும் பல உடல் கோளாறுகள் தகுந்த சுவாச பயிற்சி மற்றும் வண்ணங்கள்,ஓலிகள் மற்றும் சில மிக எளிமையான பயிற்சிகள் மூலம் முழுவதும் குணப்படுத்த முடியும்.இதை தான் நாம் 'ஹெல்த் தெரபி' இல் கொடுத்து வருகிறோம். மிகுந்த பலன் கொடுத்து வருகிறது. சமீபமாய் கூட நம் குழுவை சேர்ந்த இருவரின் அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டது இதன் மூலம். அப்படி 'ஹெல்த் தெரபி' யில் சில பிரத்யேக கிரகங்களின் தாக்கம் கொண்ட உணவு பொருட்களின் பயனையும் கூறி வருகிறோம். அவற்றில் சில :
(1) பாதாம் : பாதாம் அடிக்கடி உண்பது நம் ஜாதகத்தில் சூரியனை வலுப்படுத்தும். சூரியன் பலவீனமான பலர் வீட்டிலேயே பாதாம் இருப்பினும் உண்ண மாட்டார்கள். மேலும் பாதாம் நம் மூளையை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தும் ஒன்றாகும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் மட்டும் 'பாதாம்' பருப்பை நீரில் ஊறவைத்து பின்பே உண்ண வேண்டும். இது சூரியனை வலுப்படுத்துவதால் தந்தை மற்றும் அரசாங்க அதிகாரிகள், அரசு ரீதியான நல்லுறவு போன்றவற்றிற்கு உதவும்.
(2) சந்திரன் மற்றும் சுக்கிரன் கிரகங்களால் வரும் கோளாறுகளை இஞ்சியின் மூலம் தீர்த்து கொள்ளலாம் !! அதே போல் ஏழரை சனியின் தாக்கத்தில் இருப்போரும் இஞ்சியை அதிக்க அளவில் சேர்த்து கொள்ள மிகுந்த காபந்தை தரும். மேலும் இது எலும்புகளை வலுப்படுத்தும் ஒன்றாகும். சனி-செவ்வாய், சனி-சந்திரன், சனி-புதன் சேர்க்கையால் வயிற்று கோளாறுகள் மற்றும் பேதி போன்றவை ஏற்படும். இவற்றிற்கு அந்த காலத்தில் உணவு உண்ட பிறகு இஞ்சியை கொதிக்க வைத்த நீரில் சிறிது கருப்பு உப்பை சேர்த்து அருந்துவர்.சில காலங்கள் முன்பு வரை வைத்தியர்கள் நோயாளிகளின் கிரக நிலைகளையும் ஆராய்ந்தே அதற்கேற்ற மருத்துவம் செய்து வந்தனர்.
(3) மூன்றாவது சுற்று ஏழரை சனி, மற்றும் பொதுவாக சனியினால் ஏற்படும் கோளாறுகள் பூண்டின் மூலம் தீர்த்து கொள்ளலாம். பூண்டு-சனி மற்றும் கேதுவினால் ஏற்படும் மன இறுக்கத்தை குறைகிறது. வலிப்பு வருபவர்களுக்கு உடனடியாக பூண்டை முகர கொடுத்தாலோ அல்லது பூண்டை கசக்கி அதன் சாரை மூக்கில் விட்டாலோ உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இது போன்று பல முறைகள் நம் 'ஹெல்த் தெரபி' யில் கொடுக்கப்படுகின்றன.முதலில் கிரக ரீதியாக உள்ள கோளாறுகளை கண்டுபிடித்த பிறகே தெரபி கொடுக்கப்படுகிறது.வெறும் 15 நிமிடங்களில் கொடுக்கப்படும் இதை தினசரி 15-30 நிமிடம் வரை கடைபிடித்து வந்தால் போதும். பல ஆயிரங்களை லட்சங்களை மருந்துக்கு கொடுப்பதை தவிர்க்கலாம் !! பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நோய்களுக்கே 20 நாட்களில் குணம் தெரிந்தது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் !!

Post a Comment

Previous Post Next Post

Get in touch!