சப்தங்கள், வார்த்தைகள், வண்ணங்கள் எல்லாவற்றாலும் நம் குறிப்பிட்ட தேவைகளை பிரபஞ்சத்தில் ஈர்த்து நம்மிடம் சேர்க்கும் சக்தி உண்டு. இதை தான் 'Money தெரபி' யில் கொடுத்து வருகிறோம். தற்போது முதல் நிலை முடிந்து பயன் கண்டவர்கள் 'Money தெரபி'- Advanced தெரபி" எடுத்து வருகிறார்கள். இதில் வேண்டியதை அடைய நாமே உருவாக்கி கொள்ளும் குறியீடு முறைகள், பிரயோக முறை, மற்றும் சில ஒளிகள் ஒலிகள் அடங்கிய CD வழங்கப்படும்.அவற்றை தினசரி பார்த்தும் கேட்டும் வருவதாலும் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. ஒரு சிலருக்கு கால நிலை மிக மிக மோசமாக இருந்தால் மட்டுமே இதன் பயன்கள் கிடைக்காமல் போகும்-இது அனுபவத்தில் கண்டது-அவர்கள் நாம் கூறும் கிரக பரிகாரங்களையும் சேர்த்து செய்தால் பலன் நிச்சயம். பெரிய தேவைகள் உள்ளவர்கள் இதை செய்து பயன் அடையலாம். அப்படி Advanced தெரபி எடுத்து வருவோரிடம் நான் கூறும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முக்கிய செய்தி : கருத்து பெட்டியில் விலை விவரங்கள் கேட்பதை தவிர்க்கவும். தேவைகள் இருப்பின் தொலைபேசியில் அணுகவும் . +919840130156

1. செல்வத்தின் கடவுளான மஹாலக்ஷ்மியை தனி படமாகவோ இல்லை விக்கிரகமாகவோ வைத்து வழிபட கூடாது-அவசியம் பெருமாள் (விஷ்ணு) இணைந்திருக்கும் படங்கள் தான் பூஜிக்க பலன் தரும். ஆந்தையின் மேல் அமர்திருக்கும் லக்ஷ்மியை வழிபட கூடாது. கருடன் மற்றும் பெருமாள் இணைந்துள்ள படம் வெகு சிறப்பு.உங்கள் வெற்றிக்காக கருடனுடன் அமர்திருக்கும் தாயார்
மற்றும் பெருமாள் அபூர்வ படம் ஒன்றை இணைத்திருக்கிறேன். தரவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும். (Advanced தெரபி-வருவோர்கள் எம்மிடமே லாமிநேசன் செய்யப்பட்ட இந்த புகைப்படத்தை பெற்று கொள்ளலாம்)

2. பண வரவை அதிகரிக்க கொடுக்கப்பட்டுள்ள படத்தை வைத்து வெள்ளை மற்றும் சிகப்பு தாமரைகள் சாற்றி, கீழ்க்கண்ட ஒரு வரி மந்திரத்தை 1008 முறை தாமரை மணி மாலை கொண்டு ஜெபித்து, நிவேதனம் செய்யவும். இதை ஒன்பது நாட்கள் செய்ய வேண்டும். நல்ல பலன் தெரியும்.புதன்கிழமையில் ஆரம்பித்து செய்யவும். வளர்பிறை ஆகவும் இருப்பின் மேலும் நலம். இதை வாழ் நாள் முழுதும் தொடர்ந்து செய்பவர்களும் உண்டு.

|| ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் ||

3. உருவேற்றப்பட்ட || சோடஷி யந்திரம் || வீட்டில் வைத்து வரவும்.இது மிகுந்த பயன் தருவதோடல்லாமல் பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும். தனியாக தொழில், வேலை செய்து வரும் பெண்மணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். (இதுவும் பயிற்சிக்கு வருவோர்க்கு வழங்கப்படும்)

4. உணவு அருந்தும் முன் மூன்று உருண்டைகள் உணவை தனியாக வைத்து விட்டு, பின்பு முறையே பறவை,நாய் மற்றும் பசுக்களுக்கு தினசரி வழங்கி வரவும்.

பணம் தான் பல பிரச்சனைகளுக்கும் பிரதானமாய் இருந்து வருவதாலும், என்னை அன்றாடம் சந்திக்க வருவோரின் குறைகளும் இதுவாகவே இருப்பதால், சில பதிவுகள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிட்டு வருகிறோம். பணத்தை ஈர்க்கும் முறை பல உண்டு.

பணத்தை ஈர்க்க தனிப்பட்ட பரிகாரங்களை சிலருக்கு வீட்டு மருந்து, சிலருக்கு வைத்தியர் தரும் மருந்து,சிலருக்கு ஊசி, கண்டிப்பாக தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை-இப்படி தான் வேறு படுத்தி கொடுத்து வருகிறேன்.ஓரிருவருக்கு தான் எது செய்தாலும் சரியாகாமல், அறுவை சிகிச்சை என கூறியுள்ள தாந்த்ரீக முறைகள் தேவைப்படும்-அவர்கள் தேவையும் அதிகமாக இருந்தால் !! மற்றோர்க்கு இந்த தெரபி முறைகளையும் அவற்றில் வழங்கப்படும் குறிப்புகளையும் தங்கள் வாழ்க்கை முறையாகவே மாற்றி கொண்டால், செல்வ செழிப்போடு வாழலாம்.வாழ்ந்தும் வருகிறார்கள் !!

Post a Comment

Previous Post Next Post

Get in touch!