ராஜஸ்தான் நண்பரை பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். அவர் தாந்த்ரீகத்தில் உலக புகழ் பெற்ற டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் சீடரின் சீடர். டெல்லியில் வாழ்ந்த டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி அவர்களின் இழப்பு
(October 1996) எங்களை போன்றோர்க்கு பேரிழப்பு. ஜோதிடத்தை தொழிலாக கொண்ட அவர் தாந்த்ரீகம் போன்றவைகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தார். ஒரு முறை அவரின் மகளுக்கே தாந்த்ரீக ரீதியான சில தொல்லைகள் ஏற்பட்ட பொழுது வேறொரு புகழ் வாய்ந்த தாந்த்ரீகரை அணுகி பெண்ணின் பிரச்சனையை தீர்த்து கொண்டார்-1980களில் . பிறகு அவரிடமே கற்று தேர்ச்சி பெற்று இவ்வுலகிற்க்கு மாபெரும் அந்த பொக்கிஷங்களை புத்தக வாயிலாக கொடுத்தார். அவரை பற்றி சில விசயங்களை ராஜஸ்தான் நண்பர் மூலம் அறிந்தேன். அவருக்கு பிறகு அவர் குடும்பத்தில் யார் ஒருவரும் ஜோதிடம்,தாந்த்ரீகம் போன்ற எதிலும் ஈடுபடுவதில்லை. நண்பரின் குருவே அதிஷ்டவசமாக அவரின் புத்தகங்களின் மூலம் கற்று கொண்டு பின்பு அவரிடம் நேரடியாக சந்தேகங்கள் கேட்டு விளக்கங்கள் பெற்று தேர்ச்சி பெற்றதால் அவரின் சீடர் என்று சொல்லி கொள்வாராம். அவரின் சீடரின் சீடர் என்று சொல்லி கொள்வதற்கே தற்போது எம் ராஜஸ்தான் நண்பர் பெருமை கொள்கிறார். எனக்கும் அவர் மானசீக குருவே. அவர் விட்டு சென்ற 600 க்கு மேற்பட்ட யந்திர, தாந்த்ரீக விசயங்கள் என்னிடம் உள்ளன. தற்போது தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள (கேரளம் தவிர) பல தாந்த்ரீகர்கள், பயிற்சி கொடுப்பவர்கள் அவர் முறையை தான் பின் பற்றுகிறார்கள். இவரை பற்றி பலர் அறிந்து கொள்ள முடியாது போனது எனக்கு மிக வருத்தமே. இதே போல் தமிழகத்தில் ஒருவர் தற்போதும் உள்ளார். பல மாணவர்களை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உருவாக்கி விட்டார். இருந்தும் அதிகம் வெளியில் தெரியாமல் ஒரு சிறு டவுனில் வசித்து வருகிறார். எமக்கு மெத்த பழக்கம். அவரிடம் தொலை பேசும் போதும் நேரில் காணும் பொழுதும் எம் முறையை மிக பாராட்டுவார். தற்போது அவர் பொது மக்களுக்கோ ஏன் சொந்த குடும்பத்தில் உள்ளோருக்கோ கூட தாந்த்ரீக பரிகாரங்கள் கொடுப்பதில்லை-வயசாகி விட்டது ஓய்வில் இருக்கிறேன் என கூறுவார். மரியாதை கருதி இந்த பதிவை இடும் முன் அவர் பெயர் பதிய அனுமதி கேட்கவே- வேண்டாம் என கூறி விட்டார். நான் மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி பற்றி அவர் புகழ் பரப்பப்பட வேண்டும் அதே போல் தான் நீங்களும் என்றும் கூற, அதற்க்கு வெகு சீக்கரம் நாள் வரும் அதன் பின்பு கூறலாம்-இப்போது வேண்டாம் என கூறி விட்டார் !! மேலும், ஏன் நீங்களே பயிற்சி கொடுக்க தொடங்கலாமே எனவும் கேட்டார். என் கால நேரமின்மையை கூறி அவரிடம் இருந்து விடை பெற்றேன். இருவருமே மிக பெரிய விஷயங்களை தற்காலத்தில் நம் மக்களின் நலனுக்கு கொடுத்தவர்கள் !! மேற்சொன்ன டாக்டர்.எல்.ஆர்.சவுத்ரி குறிப்பிட்டு உள்ள தற்காலத்தில் கிடைக்க முடியாத இரண்டு வீரியமான தாந்த்ரீக பொருட்கள் எனக்கு ராஜஸ்தான் சீடர் மூலம் கிடைத்தது !! பதிவு மிக நீண்டு விட்டதால் அது பற்றி மற்றொரு சமயம் தனி பதிவிடுகிறேன் !!

Post a Comment

Previous Post Next Post

Get in touch!