இந்த திதியில் புதிய நல்ல காரியங்கள் தொடங்குவதை தவிர்க்கவும். போட்டியாளர்கள், எதிரிகள் போன்றோரை எதிர்கொள்ள திட்டம் தீட்ட உகந்த திதியாக கருதப்படுகிறது. மேலும் தடைகள் அனைத்தும் அகல இந்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறை மனதினுள் 'கங்' என்ற மந்திரத்தை கூறி வர, தடைகள் அனைத்தும் அகன்று நல் வழி பிறக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு அவரின் பின்புறம் இலுப்பெண்ணை கொண்டு மண் அகல் ஏற்றி வைக்க வாழ்வு சிறக்கும்.