பொதுவாகவே மூலிகைகள் மற்றும் மரங்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டதை செய்யும் திறன் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்-மேலும் இது பற்றி பல சித்த பெருமக்களும் உணர்த்தி விட்டு சென்றுள்ளனர். ஆகையால் தான் சில மரங்களை அல்லது செடிகளை வீடுகளில் அல்லது நம் வசிப்பிடத்தில் வைக்கலாம் அல்லது வைக்க கூடாது என்ற விதி உள்ளது.
பெண்களை வசியம் செய்யும் மூலிகை மை விற்பனை செய்யும் ஒரு நபர், ஒரு முறை அந்த மூலிகையை வேறொருவருக்கு கொடுக்க சாப நிவர்த்தி செய்து எடுத்து வைத்திருக்கும் சமயம் அங்கு வந்த அவரது சித்தியின் மகள் (தங்கை) அவரை மாமா என்று அழைத்தாராம். அன்று முதல் அந்த தொழில் செய்வதையே விட்டு விட்டேன்" என்றார். இது ஒரு கட்டுரையாகவே குமுதத்தில் வந்தது. அதே போன்று மூலிகைகளை நன்கு சக்தியூட்டம் செய்து நாம் விற்க விரும்பும் இடத்தில புதைப்பது மற்றும் வேறு சில விஷயங்கள் செய்வதன் மூலம், உடனடியாக அந்த இடம் இடத்துக்கு உரியவரின் கை மாறி வேறு ஒருவருக்கு போகும்-அதாவது விற்று விடும். இது நாம் வழக்கமாக பலருக்கு செய்து கொடுத்து வெற்றி கண்டு வரும் முறை.
நம் நிகழ்ச்சியை வேந்தர் தொலைகாட்சியில் பார்த்து திரு,கண்ணன் என்பவர் வேறு ஊரிலிருந்து வந்தார். வந்தவர் 'தான் எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய வீடு ஒன்றை விற்க முடியவில்லை அதை விற்றால் தான் கடன் தீரும் என்றும் கூறவே, அதற்கேற்ற பொருட்கள் மற்றும் தேவையான விஷயங்களை மறு நாள் தருவதாக கூறி அனுப்பி வைத்தோம். மறு நாள் வந்த அவரிடம் சில பொருட்களை கொடுத்து செய்ய வேண்டிய முறைகளை கூறி, மேலும் விளக்கு ஏற்றுவதற்கு ஒரு பாட்டில் எண்ணையும் கொடுக்கவே, வாங்கி கொண்டவர் மௌனமாக அவற்றையும் எம்மையும் மாறி மாறி பார்த்து கொண்டே இருந்தார். இதனால் எப்படி இடம் விற்கும் என்ற அவரின் மனக்கேள்வி புரிந்தது-கண்டிப்பாக விற்று விடும்-நீங்கள் ஏற்றும் இந்த எண்ணெய் தீர்வதற்குள், இது என் அனுபவ உண்மை என்று கூறி அனுப்பி வைத்தோம். இருந்தாலும் மனதில் தான் கொடுத்த பணம் வீணாகி விடுமோ என்கிற கவலை மற்றும் பயத்துடன் சென்றது தெரிந்தது.
சென்றவர் மிக சரியாக ஐந்தாவது நாள் அழைத்து தன் வீட்டிற்கு அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும், தொடர்ந்து விளக்கு ஏற்ற வேண்டுமா என்றும் கேட்டார்- மிகுந்த மன மகிழ்ச்சியில் இருந்தார்-
"ஜி , எப்படியாவது தடை படாம ரெஜிஸ்டர் ஆகிடனும், அப்ப தான் முழு பணமும் கைக்கு வரும் என்றவரை தொடர்ந்து விளக்கு ஏற்றி வருமாறும் , சொன்ன மற்ற விஷயங்களை செய்து வருமாறும் கூறினோம். சரியாக 21 ஆவது நாள் இடம் ரிஜிஸ்தர் ஆனது. பதிவு அலுவலகத்தில் இருந்து கொண்டே சந்தோஷ கண்ணீரில் பேசியவர்-இனி கடன் அனைத்தும் அடைந்து விடும் என்றும், மிக்க நன்றியும் கூறி எப்படி இது சாத்தியம் ஆயிற்று என்றார் !!
இது நம் சித்த புருஷர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் !! யாம் ஏதும் அறியோம் !! அவர்கள் கூறி வைத்ததை நியம நிஷ்டைகளோடு கடை பிடிக்க, அவர்கள் கொடுத்து சென்ற மந்திரங்களின் மூலமும் முறைகளின் மூலமும் மூலிகையை உருவேற்ற, அது தானாக தன் வேலையை செய்கிறது- பல ரியல் எஸ்டேட் அதிபர்கள் தற்போது தொலைக்காட்சி விளம்பரங்களை குறைத்து கொண்டு இடம் சீக்கிரம் விற்க நம்மிடம் வருகின்றனர் !! எல்லாம் சித்தர்களின் மகிமை !!
மேலதிக விவரங்களுக்கு :