17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.


மேற்கண்ட நமது பதிவை கண்டு பலர் தொடர்ந்து தொலைபேசியில் இது வேண்டும் என்று கேட்டு வந்தனர்-ஆனால் சாமானியர்கள் வாங்கும் விலையில் இல்லை இந்த ருத்திராட்சம்-ரூ.90,000 முதல் 1,50,000 வரை விற்கப்படுகிறது. ஆகையால் இதை விசாரிப்போரிடம் நாம் நமது அனுபவத்தில் கண்ட உண்மையை சொல்வதுண்டு-ஆம், இது கொடுக்க கூடிய அதே பலனை தரவல்லது 7 மற்றும் 8 முக ருத்திராட்சங்கள். சேர்த்து அணிய வேண்டும். லக்ஷ்மி மற்றும் கணபதியின் ஆகர்ஷன சக்தியை கொண்ட இவ்விரண்டும்- பண பிரச்சனைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும், ஏழரை, அஷ்டம, கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம். மேலும் தற்போது காம்புடன் கூடிய அதிக நபர்கள் கைபடாத அதிவீரிய காய்கள் கிடைப்பது அரிது. ஒரு சில அன்பர்களுக்காக தற்போது நேபாளத்தில் இருந்து நமக்கு வந்திருந்த ருத்திராட்ச காய்களில் அதிசியமாக இரண்டு 8 முக காய்கள் காம்புடன் !! இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது !!  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!