வசீகரம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. அப்படி வசீகரமாக நாம் இருப்பின் நமக்கு தேவையான நல்லவை, தானே தேடி வரும். ஆனால் பலருக்கு மாறாக, அனைத்திலும் தோல்வி,தொடங்கிய காரியங்களில் தடை என வாழ்வு தடம் மாறி இருக்கும். இவர்கள் 'கார்னீலியன் மற்றும் சிகப்பு ஜாஸ்பெர்' இவ்விரண்டையும் மோதிரமாக அல்லது கழுத்தில் அணிந்து வர மேற்கண்ட சர்வ ஜன வசீகர சக்தி ஏற்படும். இவற்றை தம்மோடு வைத்திருந்தாலே மிக பெரும் மாற்றத்தை, வசீகர சக்தியை கொடுக்க வல்லவை இக்கற்கள். பல நடிகை நடிகையர் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்போர் இதை அவசியம் தம்மோடு வைத்திருப்பர்.
மேலும் 'கார்னீலியன்' கல்லானது விபத்துகளை தவிர்க்கும் சக்தியை உள்ளடக்கியது ஆகும். அது மட்டுமின்றி நம் ஆழ் மன ஆற்றல்களை வெளிக்கொணரும் சக்தியும் இதற்கு உண்டு.