முக்கிய குறிப்பு : இங்கே கொடுக்கப்பட்டுள்ளவை உங்கள் புரிதலுக்காக மட்டுமே. இந்த யக்ஷினி சித்தி நாம் கொடுப்பதில்லை. சிலர், இந்த யக்ஷினி தீக்ஷை தருவதாக கேள்விப்பட்டுளோம். அவற்றை நாடாமல் இருப்பது உங்களுக்கு நன்று.

"கர்ணபிசாஷினி" , பெயரை கேட்டவுடன், இந்த யக்ஷிணியின் தன்மை பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும். நம் எவ்வித தொல்லைகளையும் கஷ்டங்களையும் நொடிப்பொழுதில் தகர்க்கும் சக்தி இந்த யக்ஷிணிக்கு உண்டு. பணம், புகழ் அனைத்தையும் அள்ளித்தரும் இந்த யக்ஷிணிக்கு நம் எதிரிகளை துவம்சம் செய்யும் சக்தியும் அதிகம். தந்த்ர சாஸ்திரத்தில், எவரை பற்றிய கடந்த காலம், நிகழ் காலம், மற்றும் எதிர் காலத்தையும் இந்த யக்ஷினி, உபாசனை செய்வோரின் காதில் கூறும் என கூறப்பட்டுள்ளது. இந்த யக்ஷினி உபாசனை மிக மிக கடினமான ஒன்றாகும். மிக கொடூரமாய்  காட்சியளிக்கும் இந்த சாக்த யக்ஷினி, தம்மை உபாசிக்கும் நபரிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட வற்புறுத்தும், ஆகவே இதை பல அகோரிகளும், காட்டில் வசிக்கும் தாந்த்ரீகர்கள் மட்டுமே உபாசிப்பர். வளர்பிறை பஞ்சமியில் இதன் உபாசனை இரவு நேரம் ஆரம்பிப்பர். இதில் சித்தியாகும் வரை குளியல், சவரம், மற்றும் தன் உடம்பில் இருந்து வெளிவரும் கழிவுகளை கழுவுதல் போன்றவை கூடாது. இந்த உபாசனையில் ஒரு வரி மந்திரம், நான்கு வரி மந்திரங்கள், இரண்டு வரி மந்திரங்கள் போன்றவை எமக்கு முன்னொரு சமயம் ஒரு சாக்த குருவின் மூலம் உபதேசிக்கப்பட்டது. (நாம் இந்த உபாசனை செய்ததில்லை ) . அவர் மூலமாக பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை அறிய முடிந்தது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,
 நம்மோடு இருப்பதா, வேண்டாமா என இந்த யக்ஷினி தான் முடிவு செய்யும். பாதியில் விட்டு விலகிவிட முடியாது. அப்படி உபாசனை செய்து யாரேனும் பிரச்சனையில் இருப்பின், அதிகாலை சூரிய உதயத்தில் தொடர்ச்சியாக ஆதித்ய ஹ்ருதயம் கூறி வர, நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.  

Post a Comment

Previous Post Next Post

Get in touch!