
மஹாபாரத காலத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த தேவி சூட்சும சொரூபத்தில் உலவுபவள். எமனுக்கு பாத்திரமான இந்த தேவியை வழிபட்டால், மரண பயம் நீங்கும். அகால மரணம் தவிர்க்கலாம். நாய்களுக்கு,பசுக்களுக்கு உடற் துன்பம் ஏற்படின், இந்த தேவியை வழிபட, அவைகளுக்கு உடல் நலம் மேம்படும். பைரவருக்கு எப்படி நாய்கள் வாகனமோ, அது போல் எமனுக்கு பிடித்தமான இரண்டு நாய்களை வாகனமாக கொண்டுள்ளாள் இந்த தேவி. நேபாளத்தில், வருடம் ஒரு முறை இந்த தேவியை வேண்டி, நாய்களுக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்து வழிபடும் வழக்கம் இன்றளவும் உண்டு.